லக்னோ பப்ளிக் ஸ்கூல் எதிர் உத்தரப் பிரதேச மாநிலம் என்ற வழக்கில், RTE சட்டத்தின் கீழ் அருகிலுள்ள பள்ளிகள் உடனடியாக சேர்க்கை வழங்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 ஆனது, 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குகிறது.
இது கல்வியை அடிப்படை உரிமையாக மாற்றும் சரத்து 21A (86வது திருத்தச் சட்டம், 2002 மூலம் சேர்க்கப்பட்டது) அடிப்படையிலானது.
இச்சட்டம் தனியார் பள்ளிகளில் EWS (பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர்) மற்றும் பின்தங்கிய குழுக்களுக்கு 25% இடஒதுக்கீட்டை கட்டாயமாக்குகிறது.
அரசாங்கம் பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும், மேலும் தனியார் பள்ளிகளுக்கான செலவுகளைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
சரத்து 51A(k) (பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும்) மற்றும் சரத்து 45 (ஆரம்பகால குழந்தை பராமரிப்பு) ஆகியன பிற விதிகளாகும்.