January 5 , 2019
2321 days
699
- குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமைகள் (திருத்தம்) மசோதா 2018க்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த மசோதாவானது பள்ளிகளில் செயல்படுத்தப்படும் இடைநிறுத்தம் இல்லாத கொள்கையை (“no-detention” policy) திருத்தம் செய்ய முயற்சிக்கிறது.
- சட்டத்தின் தற்போதைய அம்சங்களின்படி எந்தவொரு மாணவரையும் 8 ஆம் வகுப்பு வரை இடையில் நிறுத்த முடியாது.
- இந்த திருத்த மசோதாவானது இடைநிறுத்தும் கொள்கையைத் தொடர்வது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்குகிறது.
- நாட்டின் கல்வி முறையை மறுகட்டமைப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
Post Views:
699