இந்தியத் தேர்தல் ஆணையமானது (ECI) தேர்தல் சின்னங்கள் (இடஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீடு) (திருத்த) ஆணை, 2026-இன் கீழ், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் (RUPPs) பொதுவான சின்னங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான விதிகளைத் தளர்த்தியுள்ளது.
ஒரு மாநிலத்தில் நடந்த கடந்த இரண்டு தேர்தல்களில் ஏதேனும் ஒன்றில் குறைந்தது 1% செல்லுபடியாகும் வாக்குகளைப் பெற்றிருந்தால், அந்த RUPPகள் பொதுவான சின்னத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
முன்னதாக, கட்சிகள் கடந்த தேர்தலில் 1% வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் முந்தைய இரண்டு தேர்தல்களிலும் ஒரே சின்னத்தில் போட்டியிட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது.
இந்தத் திருத்தம், அரசியலமைப்பின் சரத்து 324 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 ஆகியவற்றின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது உண்மையான அரசியல் கட்சிகளை ஊக்குவிக்கவும், தீவிரமற்ற கட்சிகளை அமைப்பிலிருந்து நீக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேர்தல் சின்னங்கள், தேர்தல் சின்னங்கள் (இடஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீடு) ஆணை, 1968-இன் கீழ் ஒதுக்கப்படுகின்றன.