TNPSC Thervupettagam
September 14 , 2025 8 days 55 0
  • இந்திய இராணுவம், சிந்தூர் நடவடிக்கையின் போது, ​​உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்ட SAMBHAV (Secure Army Mobile Bharat Version) எனும் பாதுகாப்பான கைபேசி சூழல் அமைப்பைப் பயன்படுத்தியது.
  • அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புக்காக, SAMBHAV தொலைபேசிகள் WhatsApp போன்ற தளங்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்டது.
  • 5G தொழில்நுட்பத்தில் இயங்குகின்ற SAMBHAV, M-Sigma போன்ற உள்நாட்டுச் செயலிகளைப் பயன்படுத்தி முழுமையான மறைகுறியாக்கப்பட்ட தகவல் தொடர்புகளை வழங்குகிறது.
  • M-Sigma என்பது WhatsApp ஊடகத்திற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட ஒரு பாதுகாப்பான செய்தியிடல் செயலியாகும் என்பதோடு இது ஆவணங்கள், படங்கள் மற்றும் ஒளிப் படங்களைப் பாதுகாப்பாகப் பகிர அனுமதிக்கிறது.
  • SAMBHAV என்பது வலையமைப்பைச் சாராதது ஆகும் மற்றும் பல அடுக்கு குறியாக்கம் மற்றும் 5G நுட்பத்திற்குத் தயாரான கைபேசிகள் மூலமான நடவடிக்கை மூலம் இயங்கும் போது உடனடி இணைப்பை வழங்குகிறது.
  • 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற இந்தியா-சீனா இராணுவப் பேச்சுவார்த்தைகளின் போது SAMBHAV தொலைபேசிகளும் பயன்படுத்தப்பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்