மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிசாங் அவர்கள், பள்ளிக் கல்விக்கான தேசிய கல்விக் கொள்கையை அமலாக்குவதற்கான “தரமான கல்வி மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் முழுமையான மேம்பாடு” எனப்படும் (SARTHAQ – ‘Students and Teachers‘ Holistic Advancement through Quality Education) திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் 2020 ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கையின் இலக்குகள் மற்றும் குறிக்கோள்களை அடைய உதவும்.
SARTHAQ திட்டம் கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் கல்வியறிவு துறையினால் உருவாக்கப்பட்டது.
இத்திட்டம்இந்திய சுதந்திர தினத்தின் 75வது ஆண்டுக் கொண்டாட்டமான ‘அம்ரித் மகோத்சவ்’ என்ற நிகழ்வின் ஒரு அங்கமாக வெளியிடப்பட்டது.
இத்திட்டம் 2020 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின் செயல்திட்டமாகும். மேலும் இது அடுத்த 10 ஆண்டுகளுக்கான அமலாக்கத்தினை செயல்படுத்தச் செய்வதற்கான ஒரு திட்டமாகும்.
மேலும் ரமேஷ்பொக்ரியால் புதுதில்லியில் நடைபெற்ற 2020 ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கை மீதான அமலாக்கம் பற்றிய ஒரு உயர்நிலைக் குழுவிற்கும் தலைமை தாங்கினார்.