TNPSC Thervupettagam
April 12 , 2021 1514 days 708 0
  • மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிசாங் அவர்கள், பள்ளிக் கல்விக்கான தேசிய கல்விக் கொள்கையை அமலாக்குவதற்கான தரமான கல்வி மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் முழுமையான மேம்பாடுஎனப்படும் (SARTHAQ – ‘Students and Teachers‘ Holistic Advancement through Quality Education) திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டம் 2020 ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கையின் இலக்குகள் மற்றும் குறிக்கோள்களை அடைய உதவும்.
  • SARTHAQ திட்டம் கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் கல்வியறிவு துறையினால் உருவாக்கப்பட்டது.
  • இத்திட்டம்  இந்திய சுதந்திர தினத்தின் 75வது ஆண்டுக் கொண்டாட்டமான அம்ரித் மகோத்சவ்என்ற நிகழ்வின் ஒரு அங்கமாக வெளியிடப்பட்டது.
  • இத்திட்டம் 2020 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின் செயல்திட்டமாகும். மேலும் இது அடுத்த 10 ஆண்டுகளுக்கான அமலாக்கத்தினை செயல்படுத்தச் செய்வதற்கான ஒரு திட்டமாகும்.
  • மேலும் ரமேஷ்  பொக்ரியால் புதுதில்லியில் நடைபெற்ற 2020 ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கை மீதான அமலாக்கம் பற்றிய ஒரு உயர்நிலைக் குழுவிற்கும் தலைமை தாங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்