TNPSC Thervupettagam

SASCI திட்டம் 2025

July 25 , 2025 2 days 71 0
  • சுற்றுலா அமைச்சகமானது, SASCI திட்டத்திற்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டிற்குள் சிறப்பாகக் காட்சியளிக்கும் பன்முகத்தன்மை கொண்ட சுற்றுலாத் தளங்களை உலகத் தரச்சான்றுகளுக்கு ஒப்பான மிகப்பெரும் தளங்களாக மேம்படுத்துவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
  • இந்தத் திட்டம் தொடர்பாக சில மாநில அரசுகளால் சமர்ப்பிக்கப்பட்ட சில திட்ட முன் மொழிவுகளின் அடிப்படையில் இந்த இடங்களானது அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • இந்தத் திட்டங்களானது தொடர்புடைய மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு மேலாண்மை செய்யப் படுகின்றன.
  • இந்தத் திட்டங்கள் ஆனது அதிகபட்சமாக 2 ஆண்டுகளுக்குள் உருவாக்கப்பட்டு முடிக்கப்பட வேண்டும், அதே சமயத்தில் இந்திய அரசானது இந்தத் திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை இதற்குரிய நிதியை வெளியிடும்.
  • SASCI என்பது 'மூலதன முதலீடுகளுக்காக மாநிலங்களுக்குச் சிறப்பு உதவி – உலக அளவில் முக்கியச் சின்னமாக உள்ள சுற்றுலா மையங்களை உருவாக்குதல்' (SASCI) என்பதைக் குறிக்கிறது.
    • மாம்மல்லபுரத்தில் உள்ள நந்தவனம் பாரம்பரியப் பூங்காவின் மேம்பாடு மற்றும்
    • நீலகிரியின் தேவலாவில் உள்ள மலர்த் தோட்டம் ஆகியன தமிழ்நாட்டில் இதில் அனுமதிக்கப் பட்ட திட்டங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்