வளர்ந்து வரும் தொழில்களுக்கு நிதியுதவியை வலுப்படுத்தும் நோக்கில், எஸ்பிஐ வங்கி 2026 ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்று ‘சக்ரா’ திட்டத்தைத் தொடங்கியது.
சக்ரா என்பது வளர்ந்து வரும் துறைகளுக்கான சிறப்பு மையம் என்பதைக் குறிக்கிறது.
வளர்ந்து வரும் மற்றும் உயர் தொழில்நுட்பத் துறைகளை மதிப்பிடுவதற்கும் நிதி அளிப்பதற்கும் தேவையான நிறுவனத் திறனை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
எஸ்பிஐ வங்கியானது, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்சார வாகனப் போக்குவரத்து, பசுமை ஹைட்ரஜன், குறைக்கடத்திகள், மின்கலன் சேமிப்பு, கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்தல், திறன்மிகு உள்கட்டமைப்பு மற்றும் தரவு மையங்கள் உட்பட எட்டு வளர்ந்து வரும் துறைகளை அடையாளம் கண்டுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் துறைகளுக்கு 100 லட்சம் கோடி ரூபாய் மூலதனம் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சிக்கலான தொழில்நுட்பங்களை வங்கிகளால் நிதியளிக்கக் கூடிய திட்டங்களாக மாற்றுவதற்கு, சக்ரா ஒரு அறிவுசார் மற்றும் முடிவெடுக்கும் ஆதரவு மையமாகச் செயல்படும்.