ஜூலை 1, 1955 அன்று உருவாக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கியானது (SBI), சரியாக 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
1806 ஆம் ஆண்டில், கல்கத்தா வங்கி நிறுவப்பட்டது பின்னர் அது வங்காள வங்கி என மறுபெயரிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து பம்பாய் வங்கி (1840) மற்றும் மெட்ராஸ் வங்கி (1843) ஆகியவை உருவாக்கப்பட்டன.
1921 ஆம் ஆண்டில், இவை மூன்றும் இணைக்கப்பட்டு இந்திய இம்பீரியல் வங்கி என்று உருவாக்கப்பட்டது.
ஜூலை 1, 1955 அன்று, பாரத ஸ்டேட் வங்கிச் சட்டத்தின் கீழ் ஸ்டேட் வங்கியாக இது உருவாக்கப்பட்டது.
பின்னர் பல்வேறு காலக் கட்டங்களில், எஸ்பிஐ வங்கியானது, பீகார் வங்கி, தேசிய லாகூர் வங்கி, கொச்சின் வங்கி, சவுராஷ்டிரா ஸ்டேட் வங்கி மற்றும் இந்தூர் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது.