TNPSC Thervupettagam

SDG 6 இலக்கின் கீழ் WASH முன்னேற்றம்

September 2 , 2025 20 days 74 0
  • உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெஃப் ஆகியவை 6வது நிலையான மேம்பாட்டு இலக்கின் (SDG) கீழ் உலகளாவிய WASH (நீர், துப்புரவு மற்றும் சுகாதாரம்) முன்னேற்றம் குறித்த 2024 ஆம் ஆண்டுக் குறிப்பினை வெளியிட்டன.
  • SDG 6 ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் பாதுகாப்பான குடிநீர், துப்புரவு மற்றும் சுகாதாரத்திற்கான உலகளாவிய அணுகலை இலக்காகக் கொண்டுள்ளது.
  • 2015 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், 961 மில்லியன் மக்கள் பாதுகாப்பாக நிர்வகிக்கப்படும் குடிநீரை அணுகுவதற்கான வாய்ப்பினைப் பெற்றனர் என்ற நிலையில் இது உலகளாவிய குடிநீர் அணுகலின் பரவலை 68 சதவீதத்திலிருந்து 74% ஆக உயர்த்தியுள்ளது.
  • கிராமப்புற குடிநீர் அணுகலின் பரவலை 50 சதவீதத்திலிருந்து 60% ஆகவும், நகர்ப்புற குடிநீர் அணுகலின் பரவலை 83% ஆகவும் அதிகரித்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, 2.1 பில்லியன் மக்கள் இன்னும் பாதுகாப்பான முறையில் வழங்கப் படும் குடிநீர் சேவைகளைப் பெறவில்லை.
  • அவர்களில், 1.4 பில்லியன் பேர் அடிப்படை குடிநீர் சேவைகளையும், 287 மில்லியன் பேர் வரையறுக்கப்பட்ட குடிநீர் சேவைகளையும், 302 மில்லியன் பேர் மேம்படுத்தப்படாத நீர் ஆதாரங்களையும், 106 மில்லியன் பேர் மேற்பரப்பு நீரையும் நம்பியுள்ளனர்.
  • 2015 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் மேற்பரப்பு நீரைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை 61 மில்லியன் குறைந்துள்ளது.
  • 2015 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், சுமார் 1.2 பில்லியன் மக்கள் பாதுகாப்பான முறையில் நன்கு மேலாண்மை செய்யப்படும் துப்புரவு சேவைகளை அணுகும் வாய்ப்பினைப் பெற்றனர் என்பதோடு இது உலகளாவிய துப்புரவு சேவை வழங்கீட்டினை 48% சதவீதத்திலிருந்து 58% ஆக உயர்த்தியது.
  • கிராமப்புறத் துப்புரவு சேவை வழங்கீடு 36 சதவீதத்திலிருந்து 49% ஆகவும், நகர்ப்புற துப்புரவு சேவை வழங்கீடு 59 சதவீதத்திலிருந்து 66% ஆகவும் அதிகரித்துள்ளது.
  • திறந்தவெளி மலம் கழித்தல் 429 மில்லியன் ஆகக் குறைந்துள்ளது என்ற நிலையில் நகர்ப்புறங்களில், இது தற்போது 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, 3.4 பில்லியன் மக்கள் பாதுகாப்பாக மேலாண்மை செய்யப் படும் துப்புரவு சேவையைப் பெறாமல் உள்ளனர் என்பதோடு 1.9 பில்லியன் பேர் அடிப்படை சேவைகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
  • உலகளவில் 354 மில்லியன் மக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தொடர்ந்து பின்பற்றி வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2015 முதல் 2024 ஆம் ஆண்டு வரை, சுமார் 1.6 பில்லியன் மக்கள் அடிப்படை சுகாதாரத்திற்கான அணுகலைப் பெற்றனர் என்ற ஒரு நிலையில் இது உலகளாவிய சுகாதார சேவை வழங்கலை 66 சதவீதத்திலிருந்து 80% ஆக அதிகரித்தது.
  • கிராமப்புற சுகாதார அணுகல் 52 சதவீதத்திலிருந்து 71% ஆக உயர்ந்தது அதே நேரத்தில் நகர்ப்புற அணுகல் 86 சதவீதத்தில் நிலையானதாக இருந்தது.
  • 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, 1.7 பில்லியன் மக்கள் இன்னும் அடிப்படை சுகாதார சேவைகளைப் பெறவில்லை; மேலும் 611 மில்லியன் மக்களுக்கு எந்தச் சேவையும் கிடைக்கப் பெறவில்லை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்