6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை டிஜிட்டல் சார்ந்த எதிர்காலத்திற்கு ஏற்ப இந்தியாவை தயார் படுத்தும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு தயார்நிலைக்கான திறன் கட்டமைப்புத் (SOAR) திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நெறிமுறை சார்ந்த AI பயன்பாடு மற்றும் அடிப்படை இயந்திரக் கற்றல் கருத்துகளில் கவனம் செலுத்தும் மாணாக்கர் மற்றும் கல்வியாளர்களுக்கான மாதிரிகளை SOAR வழங்குகிறது.
2025-26 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் கல்விக்கான சிறப்பு செயற்கை நுண்ணறிவு மையத்தினை நிறுவ 500 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டது.
SOAR ஆனது டிஜிட்டல் திறன்கள், AI சார்ந்த கல்வியறிவு மற்றும் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதற்காக திறன் இந்தியா திட்டம் மற்றும் பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY) 4.0 ஆகியவற்றுடன் இணைக்கப்படுகிறது.