மத்தியப் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகமானது, தற்போதுள்ள SPICe என்ற படிவத்தை மாற்றிவிட்டு அதற்குப் பதிலாக ‘SPICe+’ என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய வலைதளப் படிவத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
எளிதில் தொழில் தொடங்குதலை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சி உள்ளது.
SPICe+ ஆனது ஒரு ஒருங்கிணைந்த வலைதளப் படிவமாக இருக்கும்.
SPICe+ ஆனது 10 விதமான சேவைகளைப் பின்வரும் 3 மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலமாக வழங்குகின்றது.
மத்தியப் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம்,
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை
ஒரு மாநில அரசு (மகாராஷ்டிரா). இவை மூலம் இந்தியாவில் ஒரு தொழிலைத் தொடங்குவதற்கான பல நடைமுறைகள், நேரம் மற்றும் செலவு ஆகியவை குறைக்கப் படுகின்றது.
இது புதியதாகத் தொடங்கப்பட்டுள்ள அனைத்துப் புதிய நிறுவனங்களுக்கும் பொருந்தும்.