இந்தியக் கடற்படையானது, ‘SPRINT’ என்ற ஒரு முன்னெடுப்பின் கீழ் ஆயுதம் தாங்கிய தன்னியக்க படகுகளை வாங்குவதற்காக சாகர் டிஃபென்ஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் சமீபத்தில் கையெழுத்திட்டுள்ளது.
‘SPRINT’ திட்டம் என்பது உள்நாட்டு நிறுவனங்களின் முக்கியப் பாதுகாப்புத் தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும்.
SPRINT என்பது "சிறப்பான பாதுகாப்பு துறைக்காக புத்தாக்கங்கள் மூலமாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் கூடுதல் ஆதரவு வழங்குவதை ஆதரித்தல் என்பதை குறிக்கிறது.