TNPSC Thervupettagam

SRP திட்டத்தில் கங்கை நீர் முதலை மற்றும் தேன் உண்ணும் கரடி

July 16 , 2025 15 hrs 0 min 43 0
  • தேசிய வனவிலங்கு வாரியத்தின் (SC-NBWL) நிலைக் குழுவானது, உயிரின மீட்புத் திட்டத்தில் கங்கை நீர் முதலை (சொம்பு மூக்கு முதலை) மற்றும் தேன் உண்ணும் கரடியைச் சேர்ப்பதற்குப் பரிந்துரைத்தது.
  • இது வனவிலங்கு வாழ்விடங்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கான மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டத்தின் (CSS-IDWH) கீழ் செயல்படுத்தப்படுகிறது.
  • SC-NBWL ஆனது 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் உருவாக்கப் பட்டது.
  • கங்கை நீர் முதலை / கரியல் நன்னீர் நதிகளில் முக்கியமாக இந்தியாவில் கங்கை நதி மற்றும் நேபாளத்தில் உள்ள ரப்தி-நர்யானி நதியின் துணை நதிகளில் வாழ்கிறது.
  • இது IUCN அமைப்பினால் மிகவும் அருகி வரும் நிலையில் உள்ள ஒரு இனமாக வகைப் படுத்தப் பட்டுள்ளது.
  • இது அருகி வரும் வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் (CITES) சர்வதேச வர்த்தகம் குறித்த உடன்படிக்கையின் இணைப்பு I பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • அனைத்து முதலை இனங்களிலும் கங்கை நீர் முதலையானது மிக மெல்லிய மற்றும் நீளமான மூக்கைக் கொண்டுள்ளது.
  • தேன் உண்ணும் கரடியானது ஒரு சிறிய விலங்கு, தனித்து வாழும், பொதுவாக இரவு நேரங்களில் வாழும் விலங்கு ஆகும்.
  • இது இந்தியா, இலங்கை மற்றும் நேபாளத்தை பூர்வீகமாகக் கொண்டது.
  • இது தீபகற்ப இந்தியா, மேற்குத் தொடர்ச்சி மலைகள், தக்காணப் பீடபூமி, கங்கைச் சமவெளி மற்றும் வடகிழக்கு போன்ற இந்தியாவில் உள்ள ஐந்து உயிர் புவியியல் மண்டலங்களில் வாழ்கிறது.
  • தேன் உண்ணும் கரடியானது IUCN அமைப்பினால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஒரு இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • இது 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை I மற்றும் CITES உடன்படிக்கையின் இணைப்பு I பகுதியின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • CSS-IDWH அந்து வனவிலங்கு வளங்காப்பிற்காக மாநில மற்றும் ஒன்றியப் பிரதேச (UT) அரசாங்கங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குகிறது.
  • இது வரை, பனிச் சிறுத்தை, ஆசிய சிங்கம் மற்றும் கான மயில் உட்பட 22 இனங்கள் ஆனது இனங்கள் மீட்பு திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்