Streets for People சவால் என்பது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு ஆன்லைன் (இணையவழி) நிகழ்வாகும்.
Streets for People challenge என்ற திட்டமும் India Cycles4 challenge என்ற திட்டமும் இணைந்து சாலைகளை மிதிவண்டி ஓட்டிகளுக்கு ஏற்றதாகவும், நடைப் பயிற்சி செய்வோருக்கு ஏற்றதாகவும், குழந்தைகளுக்கு ஏற்றதாகவும் மாற்றும் வகையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
இந்தச் சவாலானது சாலைகளை நடப்பதற்கு ஏற்றதாக மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது.
சுமார் பதினொரு நகரங்கள் "Streets for People challenge” என்ற விருதை வென்றுள்ளன.
அவை அவுரங்காபாத், பெங்களூரு, குருகிராம், கொச்சி, நாக்பூர், பிம்ரி சின்ச்வாத், புனே, உதய்ப்பூர், கோஹிமா, உஜ்ஜைன் மற்றும் விஜயவாடா ஆகியவை ஆகும்.
பத்து நகரங்கள் "Nurturing Neighbourhood challenge (வளமூட்டும் அண்டை நகரங்கள்)" என்ற விருதை வென்றுள்ளன.
அவை பெங்களூரு, ஹுப்பள்ளி-தர்வாட், இந்தூர், ஜபல்பூர், காக்கிநாடா, கொச்சி, கோஹிமா, ரூர்கேலா, வடோதரா, வாரங்கல் ஆகியவை ஆகும்.