TNPSC Thervupettagam

Streets for People சவால்

January 22 , 2022 1240 days 479 0
  • Streets for People சவால் என்பது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு ஆன்லைன் (இணையவழி) நிகழ்வாகும்.
  • Streets for People challenge என்ற திட்டமும் India Cycles4 challenge என்ற திட்டமும் இணைந்து சாலைகளை மிதிவண்டி ஓட்டிகளுக்கு ஏற்றதாகவும், நடைப் பயிற்சி செய்வோருக்கு ஏற்றதாகவும், குழந்தைகளுக்கு ஏற்றதாகவும் மாற்றும் வகையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
  • இந்தச் சவாலானது சாலைகளை நடப்பதற்கு ஏற்றதாக மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது.
  • சுமார் பதினொரு நகரங்கள் "Streets for People challenge” என்ற விருதை வென்றுள்ளன.
  • அவை அவுரங்காபாத், பெங்களூரு, குருகிராம், கொச்சி, நாக்பூர், பிம்ரி சின்ச்வாத், புனே, உதய்ப்பூர், கோஹிமா, உஜ்ஜைன் மற்றும் விஜயவாடா ஆகியவை ஆகும்.
  • பத்து நகரங்கள் "Nurturing Neighbourhood challenge (வளமூட்டும் அண்டை நகரங்கள்)" என்ற விருதை வென்றுள்ளன.
  • அவை பெங்களூரு, ஹுப்பள்ளி-தர்வாட், இந்தூர், ஜபல்பூர், காக்கிநாடா, கொச்சி, கோஹிமா, ரூர்கேலா, வடோதரா, வாரங்கல் ஆகியவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்