இந்திய உச்சநீதிமன்றம் “SUPACE” எனப்படும் (Supreme Court Portal for Assistance in Courts Efficiency) நீதிமன்றங்கள் திறன்பட செயல்பட உதவுவதற்கான உச்சநீதிமன்ற இணையதளம்) செயற்கை நுண்ணறிவு (AI) தளம் ஒன்றினைத் தொடங்கியுள்ளது.
இத்தளத்தின் மூலம் வழக்குகள் பதிவு செய்யப்படும் நேரங்களில் பெறப்படும் அதிகளவிலான தரவுகளை கையாளுவதற்கான இயந்திர ரீதியிலான கற்றலை மேம்படுத்த உச்சநீதிமன்றம் எண்ணியுள்ளது.
செயற்கை நுண்ணறிவுக் குழு
நீதிபதி L. நாகேஷ்வர ராவ், உச்சநீதிமன்றத்தின் செயற்கை நுண்ணறிவுக் குழுவின் தலைவராவார்.
இந்தியத் தலைமை நீதிபதி (CJI) S.A. பாப்டே அவர்கள், செயற்கை நுண்ணறிவுக் குழுவின் முதல் தலைவராவார்.
S.A. பாப்டே 2019 ஆம் ஆண்டில் இந்தியத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.