2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து (TET) விலக்கு கோரும் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியது.
இத்தீர்மானம் 2009 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவு 23-இல் திருத்தம் செய்யக் கோருகிறது.
2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 முதல் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) தேசிய ஆசிரியர் கல்வி சபை (NCTE) கட்டாயமாக்கியது.
15 முதல் 20 ஆண்டுகள் பணியாற்றிய சுமார் 3,28,701 ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் பணியைத் தொடர்வதற்கு TET தேவையால் பாதிக்கப்படலாம்.
2028 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் இந்த ஆசிரியர்கள் TET-இல் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து NCTE மூலம் அறிவிப்பை வெளியிட வேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.