பெங்களூரைச் சேர்ந்த கார் பந்தய வீரர் குஷ் மைனி, மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் ஃபார்முலா 2 வெற்றியைப் பெற்று ஒரு வரலாற்றைப் படைத்துள்ளார்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) ஆனது, 24 மணி நேரத்தில் அதிகமான ஆயுள் காப்பீடுகளை (588,107) விற்றதற்காக கின்னஸ் உலகச் சாதனைப் பட்டத்தைப் பெற்று உள்ளது.
இரயில் பாதைகளை 100% மின்மயமாக்கும் ஒரு நிலையை அடைந்த 24வது மாநிலம் / ஒன்றியப் பிரதேசமாக குஜராத் மாறியுள்ளது.
புது டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் அமைப்பின் பத்தாவது நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பிரதமர் தலைமை தாங்கினார்.
கிரீன்கோ, அதானி கிரீன் மற்றும் JSW எனர்ஜி ஆகியவற்றின் உதவியுடன் 2032 ஆம் ஆண்டிற்குள் சுமார் 51.24 GW திறன் கொண்ட நீரேற்றுப் புனல் மின்னாற்றல் திறனை உருவாக்குவதற்கு என இந்தியா திட்டமிட்டுள்ளதாக மத்திய மின்சார ஆணையம் (CEA) தெரிவித்துள்ளது.
9வது பிரிக்ஸ் தொழில் துறை அமைச்சர்கள் கூட்டம் ஆனது பிரேசிலின் பிரேசிலியா நகரில் "Strengthening Global South Cooperation for More Inclusive and Sustainable Governance" என்ற கருத்துருவின் கீழ் நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டு உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு ஆனது நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் நடைபெற்றது.
இந்தியாவானது பிரான்ஸ் மற்றும் கோஸ்டாரிகாவுடன் இணைந்து “Blue Talks” எனப் படும் இரண்டாவது கடல் சார் பேச்சுவார்த்தையை புது டெல்லியில் நடத்தியது.
மூன்றாவது ஐக்கிய நாடுகளின் பெருங்கடல் மாநாடு (UNOC3) ஆனது 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிரான்சின் நைஸ் எனுமிடத்தில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.