TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 24 , 2025 3 days 50 0
  • நீரஜ் சோப்ரா 88.16 மீட்டர் நீளம் ஈட்டி எறிந்து, ஜூலியன் வெபரை வீழ்த்தி 2025 ஆம் ஆண்டு பாரிஸ் டைமண்ட் லீக் போட்டியில் வெற்றி பெற்றார்.
  • எண்ணிமப் பண வழங்கீடுகளை விரிவுபடுத்துதல் மற்றும் நிதி உள்ளடக்கத்தினை மிக நன்கு விரிவுபடுத்துவதில் அதன் பங்கிற்காக இந்திய அஞ்சலகப் பண வழங்கீட்டு வங்கி (IPPB) நிதிச் சேவைகள் துறையிடமிருந்து 2024-25 ஆம் ஆண்டிற்கான எண்ணிமப் பண வழங்கீடுகள் விருதைப் பெற்றுள்ளது.
  • மத்திய கல்வித் துறை அமைச்சகமானது, மாணவர்கள் பயிற்சி மையங்களைப் பெரும் அளவில்  சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும், போட்டி நுழைவுத் தேர்வுகளின் செயல் திறன் மற்றும் நியாயத் தன்மையினை மதிப்பிடுவதற்குமான பல நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க உயர்கல்விச் செயலாளர் வினீத் ஜோஷி தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது.
  • 2020–21 முதல் 2024–25 ஆம் நிதியாண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் சுமார் 65,227.68 கோடி ரூபாய்கள் மதிப்புள்ள கொள்முதல் ஆணைகளைப் பெற்று, உத்தரப் பிரதேச மாநில அரசானது இணையச் சந்தை (GeM) மூலமான பொதுக் கொள்முதலில் முதலிடத்தில் உள்ளது.
  • சன்லென்கா என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படும் லெனாகாபவிர் என்ற மருந்தானது எச்.ஐ.வி சிகிச்சைக்காக என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினால் (FDA) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • சுரேஷ் எரியட்டின் இயங்குபடத் திரைப்படமான  Desi Oon, பிரான்சில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு அன்னேசி சர்வதேச இயங்குபட விழாவில் மிகச் சிறந்த commissioned film (அதிகார உரிமை பெறப்பட்ட படம்) என்ற தேர்வு மன்ற (ஜூரி) விருதை வென்றுள்ளது.
  • தமிழ்நாடு மாநில வேளாண் சந்தைப்படுத்தல் வாரியமானது (TNSAMB) ஐந்து வேளாண் பொருட்களுக்குப் புவிசார் குறியீடினைக் (GI) கோரியுள்ளது.
    • அவை நல்லூர் வரகு (கடலூர்); வேதாரண்யம் முல்லை, (நாகப்பட்டினம்); நத்தம் புலி, (திண்டுக்கல்); ஆயக்குடி கொய்யா (திண்டுக்கல்), மற்றும் கப்பல்பட்டி கரும்பு முருங்கை (திண்டுக்கல்) ஆகியனவாகும்.
  • தேசிய அனல் மின் கழகமானது (NTPC), லடாக்கின் லே நகரத்தில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • 3,650 மீட்டர் உயரத்தில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ள இந்தத் திட்டமானது உலகின் மிக உயரமான ஒரு பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் போக்குவரத்து சோதனைத் திட்டமாகும்.
  • கர்நாடக மாநில அரசானது, மதச் சிறுபான்மையினருக்கான வீட்டுவசதி ஒதுக்கீட்டை 10 சதவீதத்திலிருந்து 15% ஆக உயர்த்தியுள்ளது.
    • திருத்தப்பட்ட இந்த ஒதுக்கீடு அம்மாநிலத்தின் வீட்டு வசதித் துறையின் கீழ் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப் புற வீட்டுவசதித் திட்டங்களுக்கும் இனிமேல் பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்