TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 25 , 2025 14 hrs 0 min 44 0
  • ஏழு கண்டங்களிலும் உள்ள மிக உயர்ந்த சிகரங்களில் ஏறிய முதல் தமிழக நபர் என்ற பெருமையினை N. முத்தமிழ் செல்வி பெற்றுள்ளார்.
  • சென்னையின் லயோலா கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்று உதவிப் பேராசிரியர் பதவியைப் பெற்ற தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பெண் N. ஜென்சி ஆவார்.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, 2025-26 ஆம் நிதியாண்டிலிருந்து, சிறு கடன் நிதியியல் வங்கிகளுக்கான ஒட்டு மொத்த முன்னுரிமைத் துறை கடன் வழங்கீட்டினை மொத்தக் கடனில் 75 சதவீதத்திலிருந்து 60% ஆகக் குறைத்துள்ளது.
  • அமெரிக்காவின் டெக்சாஸில் அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின மக்களை நினைவு கூரும் வகையில் ஜூன் 19 ஆம் தேதியன்று கருப்புச் சுதந்திர தினம் அல்லது ஜூன்டீன் தேசிய சுதந்திர தினம் அனுசரிக்கப் படுவதோடு, அவர்கள் இறுதியாக 1865ம் ஆண்டில் சுதந்திரம் பெற்றதை அந்த நாடு கண்டது.
  • அமெரிக்கா மிட்நைட் ஹேமர் எனும் ஓர் நடவடிக்கையினைத் தொடங்கி, ரேடாருக்குப் புலப்படாத வகை குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் டோமாஹாக் எறிகணைகளைப் பயன்படுத்தி ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்களான ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹானைத் தாக்கியது.
  • நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நாணயவியல் ஆய்வாளர் ஆறுமுக சீதா ராமன் ஆகியோர் இணைந்துஎழுதிய வரலாறு கூறும் தமிழ்நாட்டுக் காசுகள் (தமிழக வரலாற்றைப் பற்றிப் பேசும் நாணயங்கள்) என்ற புத்தகத்தின் இரண்டு தொகுதிகளைத் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார்.
  • எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அவரது ஒற்றைச் சிறகு ஓவியா என்ற சிறார்கள் புதின நூலிற்காக வேண்டி தமிழ் மொழிப் பிரிவில், 2025 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • கூத்தொன்று கூடிற்று என்ற ஒரு சிறுகதைக்காக என எழுத்தாளர் லட்சுமிஹருக்கு தமிழ் மொழிப் பிரிவில், 2025 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அருணாச்சலப் பிரதேசம் 58000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக 2025-2035 வரையிலான காலக்கட்டத்தினை 'நீர் மின்னாற்றலுக்கான பத்தாண்டு' என்பதாக அறிவித்துள்ளது.
  • மத்திய அரசானது 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழ்நாட்டில் ஏற்கனவே அங்கீகரிக்கப் பட்டுள்ள இரண்டு மின்னணு பொருட்கள் உற்பத்தித் தொகுதிகளையும் சேர்த்து, மூன்றாவது மின்னணுப் பொருட்கள் உற்பத்தித் தொகுதியையும் அமைக்கச் செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • உலக சுகாதார சபையானது, சிரங்கு உள்ளிட்ட சில தோல் சம்பந்தப்பட்ட நோய்களை உலகளாவியப் பொது சுகாதார முன்னுரிமை நோய்களாக அதிகாரப் பூர்வமாக ஒரு மனதாக அங்கீகரித்துள்ளது.
  • இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் அமைந்துள்ள மௌண்ட் லெவோடோபி லக்கி-லக்கி எரிமலை சமீபத்தில் வெடித்தது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 04 ஆம் தேதியினை ஒருதலைப் பட்சமான வற்புறுத்தல் நடவடிக்கைகளுக்கு எதிரான சர்வதேச தினமாக அறிவிக்கும் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.
  • ஜூன் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படும் உலக ஜின் (மது வகை) தினம் ஆனது 2025 ஆம் ஆண்டில் ஜூன் 14 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.
  • வெறுப்பு, பாகுபாடு, இனவெறி மற்றும் சமத்துவமின்மை போன்றவற்றை எதிர்த்துப் போராடுவதற்காக ஜூன் 18 ஆம் தேதியன்று வெறுப்பினை உண்டாக்கும் பேச்சினைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Hate Speech and Artificial Intelligence Nexus: Building coalitions to reclaim inclusive and secure environments free of hatred" என்பதாகும்.
  • ஜூன் 21 ஆம் தேதியன்று கொண்டாடப்படும் உலக இசை தினமானது, உலகளாவியச் சுதந்திரமான பொது நிகழ்ச்சிகள் மூலம் கலாச்சார ஒற்றுமை மற்றும் மிகுந்த ஒரு உள்ளடக்கத்தை ஊக்குவிக்கிறது.
    • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Healing Through Harmony" என்பது ஆகும்.
  • ஆண்டுதோறும் ஜூன் 22 ஆம் தேதியன்று கொண்டாடப்படும் உலக மழைக்காடுகள் தினமானது, மழைக் காடுகளின் ஒரு முக்கியத்துவம் குறித்தப் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
    • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Forests and Foods" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்