TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 28 , 2025 3 days 56 0
  • சர்வதேச அணுசக்தி முகமையானது (IAEA), இதுவரையில் நடைபெறாத மிகப்பெரிய அளவிலான சர்வதேச அணுசக்தி சார்ந்த அவசர நிலைக்கான ConvEx-3 பயிற்சியினை ருமேனியாவில் நடத்தி வருகிறது.
  • மத்திய அரசானது, உத்தரப் பிரதேச மாநிலத்தின் பஹ்ரைச் என்னுமிடத்தில் உள்ள கட்டார்னியாகாட் வனவிலங்கு சரணாலயத்தில் கங்கை நீர் முதலை இனங்கள் வளங் காப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • ஆந்திரப் பிரதேச மாநில அரசானது, அரசுப் பள்ளிகளில் கல்வி ரீதியாக பின் தங்கி உள்ள மாணவர்கள் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் திறம் பெற்று முன்னேற உதவும் தொழில்நுட்ப அடிப்படையிலான 'வித்யா சக்தி' எனும் ஒரு திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இரத யாத்திரை யாத்ரீகர்களுக்கு நிகழ்நேர மற்றும் எளிதில் அணுகக் கூடிய இரயில் சேவைகளை வழங்குவதற்காக கிழக்குக் கடற்கரை இரயில்வே நிர்வாகமானது, 'ECoR யாத்ரா' செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • 1967 ஜூன் 24 அன்று கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) சட்டம் இயற்றப்பட்டதைக் குறிக்கும் வகையில், வெளியுறவுத் துறை அமைச்சகமானது பாஸ்போர்ட் சேவை தினத்தை ஜூன் 24, 2025 அன்று கொண்டாடியது.
  • உலகளவில் மில்லியன் கணக்கான கைம்பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை முன்னிலைப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூன் 23 ஆம் தேதி அன்று சர்வதேச கைம்பெண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2025 ஆம் ஆண்டிற்கான கருத்துரு ‘Invisible Women, Invisible Problems’ என்பதாகும்.
  • இந்தியாவில் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஜூன் 25 அன்று ‘சம்விதான் ஹத்யா திவாஸ்’ அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்