அதானி குழுமமானது, குஜராத் மாநிலதின் கட்ச் பகுதியில், மின் கட்டமைப்பு அல்லாத இந்தியாவின் முதல் 5 மெகாவாட் திறன் கொண்ட பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலையை அமைத்துள்ளது.
அவசரநிலை எதிர்ப்பு இயக்கத்தின் போது பிரதமர் மோடியின் அனுபவங்களை நன்கு விவரிக்கும் 'The Emergency Diaries – Years that Forged a Leader' என்ற புத்தகத்தினை மத்திய உள்துறை அமைச்சர் வெளியிட்டார்.
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) 131வது ஆண்டு விழாவில் கிர்ஸ்டி கோவென்ட்ரி அதன் முதல் பெண் மற்றும் ஆப்பிரிக்க தலைவராகப் பொறுப்பேற்றார்.
குஜராத் மாநில அரசானது, 14,000க்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் சுமார் 4,000 கிராமங்களுக்கு அதிவேக அகலப்பட்டை சார்ந்த கம்பிவட இணையதள சேவை வழங்குவதற்காக என்று திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டத்தின் (ABP) மூன்றாம் கட்டத்தினை அறிமுகப்படுத்தியது.
மகாராஷ்டிர மாநில அமைச்சரவையானது, மகாராஷ்டிரா-கோவா எல்லையில் உள்ள பவ்னார் (வர்தா) முதல் பத்ராதேவி (சிந்துதுர்க்) வரையிலான சுமார் 802 கிலோ மீட்டர் சக்திபீத் விரைவுச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்காக 20,787 கோடி ரூபாய் நிதியை அங்கீகரித்தது.
இந்தியா செயற்கை நுண்ணறிவில் இயங்கும் தனது முதல் மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பை (ATMS) டெல்லியில் உள்ள துவாரகா விரைவுச் சாலையில் அறிமுகப்படுத்தியது.
டாடா பவர்-DDL மற்றும் ஜப்பானின் நிசின் எலக்ட்ரிக் ஆகியவை டெல்லி புறநகர்ப் பகுதியில் மின்னழுத்த மின்மாற்றியுடன் கூடிய இந்தியாவின் முதல் சிறிய துணை மின் நிலையத்தை இயக்கத் தொடங்கியது.
உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் அமைந்துள்ள சிங்னா என்னுமிடத்தில் சர்வதேச உருளைக்கிழங்கு மையத்தின் தெற்காசியப் பிராந்திய மையத்தினை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
விலை ஆதரவுத் திட்டத்தின் (PSS) கீழ் மத்தியப் பிரதேசத்தில் பாசிப்பயறு மற்றும் உளுந்துப் பயறு மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உளுந்துப் பயறு ஆகியவற்றை கொள் முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள்ளாக ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அமராவதியில் இந்தியா தனது முதல் துளிம (குவாண்டம்) கணினிச் செயல்பாட்டு மையத்தினை நிறுவ உள்ளது.