TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 15 , 2025 4 days 66 0
  • தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மற்றும் அமெரிக்காவின் சிகாகோவின் சர்வதேச தமிழ் மொழி அறக்கட்டளை இணைந்து வெளியிடும் ‘Tirukkural - Treasure of Universal Wisdom’ என்ற புத்தகத்தினை தமிழக முதல்வர் வெளியிட்டார்.
  • யூடியூப் பிரபலமும் நடிகருமான பிரஜக்தா கோலி, டைம் இதழின் முதலாவது TIME100 படைப்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்ற முதல் இந்தியப் படைப்பாளி என்ற  பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் (DRI) ஆனது, “ஃபயர் டிரெயில்” என்ற குறியீட்டுப் பெயரில் நடவடிக்கையினை மேற்கொண்டு பெரிய அளவிலான சீனப் பட்டாசுகளை வெற்றிகரமாகக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தது.
  • மின்கல உற்பத்தி மற்றும் புதிய எரிசக்தி தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பில் தம் மாநிலத்தின் தலைமைத்துவத்திற்கென தெலுங்கானா மாநில அரசானது இந்தியா எரிசக்தி சேமிப்புக் கூட்டணியின் (IESA) 2025 ஆம் ஆண்டு தொழில் சிறப்பு விருதினைப் பெற்றது.
  • உத்தரகாண்ட் மாநிலத்தின் காவல்துறையானது, தங்களை மதப் துறவிகள் என்று பொய்யாகக் வெளிப்படுத்தி மக்களின் நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்தும் நபர்கள் மீது 'காலனேமி' என்ற மாநில அளவிலான அடக்குமுறை நடவடிக்கையினைத் தொடங்கியுள்ளது.
  • இடிக்கப்பட்ட பிறகு மீண்டும் கட்டமைக்கப்பட்ட மும்பையின் புகழ்பெற்ற கர்னாக் பாலம் ஆனது, இந்திய ஆயுதப்படைகளின் செயல்பாட்டின் வெற்றியைக் கருத்தில் கொண்டு, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் பெயரால் மறுபெயரிடப்பட்டுள்ளது.
  • ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீஅமர்நாத் யாத்திரை மிகப் பாதுகாப்பாகவும் சுமூகமாகவும் நடத்தப் படுவதை உறுதி செய்வதற்காக இந்திய இராணுவம் ஆனது ஆபரேஷன் ஷிவா 2025 என்ற நடவடிக்கையினைத் தொடங்கியுள்ளது.
  • மனித உடலில் புரதத்தின் செயல்பாடுகள் பற்றிய புரிதலை விரைவுபடுத்துவதற்காக வடிவமைக்கப் பட்ட BioEmu என்ற ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பினை மைக்ரோ சாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • கூகுள் நிறுவனமானது, இந்தியாவில் பயிர்க் கண்காணிப்பு மற்றும் கள அளவிலான தரவுப் பகுப்பாய்வை மேம்படுத்துவதற்காக வேளாண் கண்காணிப்பு மற்றும் நிகழ்வு கண்டறிதல் API (AMED API) இடைமுகத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்திய பெண்கள் உரிமை ஆர்வலர் வர்ஷா தேஷ்பாண்டேவுக்கு தனிநபர் பிரிவில் 2025 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை விருது வழங்கப் பட்டுள்ளது.
  • கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள அர்த்துங்கல் காவல் நிலையம் ஆனது, இந்தியத் தர நிலைகள் வாரியத்திலிருந்து IS/ISO 9001:2015 சான்றிதழைப் பெற்ற இந்தியாவின் முதல் காவல் நிலையமாக மாறியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்