சிக்கிம் மாநிலத்தின் பாக்யாங் மாவட்டத்தில் உள்ள யாக்டென், அந்தமாநிலத்தின் 'நாடோடி சிக்கிம்' முன்னெடுப்பின் கீழ் இந்தியாவின் முதல் எண்ணிம நாடோடி கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இராணுவம் ஆனது, உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள கார்கா படை வீரர்கள் களப் பயிற்சிப் பகுதியில் 'பிரசாந்த் சக்தி' என்ற பெயரிலான ஒரு அதிக விளைவு அளிக்கும் செயல்பாட்டு விளக்கப் பயிற்சியினை நடத்தியது.
புலம்பெயர்வு, நம்பிக்கை மற்றும் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை குறித்த தமது படைப்புகளுக்காக சூடான்-ஸ்காட்லாந்தைச் சேர்ந்த எழுத்தாளரான லீலா அபுலேலா 2025 ஆம் ஆண்டிற்கான PEN Pinter பின்டர் பரிசை வென்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவானது, இந்தியா உட்பட 19 நாடுகளுடன் இணைந்து இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரியதொரு கூட்டு இராணுவப் பயிற்சியான Talisman Sabre 2025 எனும் பயிற்சியினைத் தொடங்கியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் படாவுனில் உள்ள மாநில அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரு புதிய பிரதான் மந்திரி திவ்யஷா கேந்திரா (PMDK) தொடங்கப்படவுள்ளது.
இது மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதான பயனாளிகளுக்கு பரிசோதனை, ஆலோசனை, உதவி வழங்குதல் மற்றும் சிகிச்சைக்கு பிந்தைய ஆதரவு போன்ற ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குகிறது.
மனித நாகரிகத்தில் குதிரைகளின் வரலாறு மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டாடும் வகையில், ஜூலை 11, 2025 அன்று உலக குதிரை தினம் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
இது மங்கோலிய அதிபர் குரேல்சுக் உக்னாவால் ஜூன் 3, 2025 அன்று உலகளவில் குதிரைகளைக் கௌரவிக்க முன்மொழியப்பட்டது.