TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 25 , 2025 2 days 24 0
  • வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான போதைப் பொருள் பயன்படுத்தாத இளையோர்கள் என்ற தலைப்பில் மூன்று நாட்கள் அளவிலான இளையோர்களுக்கான நன்னம்பிக்கை  உச்சி மாநாடு ஆனது காசி பிரகடனத்துடன் நிறைவடைந்தது.
  • கேரள வேளாண் பல்கலைக் கழகத்தின் (KAU) வேளாண் வணிக தொழிற் வளர் காப்பகத்தில் நிறுவப்பட்டுள்ள ஆறு வேளாண் சார் புத்தொழில் நிறுவனங்கள், இராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா (RKVY) - RAFTAAR வேளாண் வணிக தொழிற் வளர் காப்பகத் திட்டத்தின் கீழ் மிகச் சிறப்பாகச் செயல்படும் முயற்சிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
  • நாகாலாந்தில் உள்ள கிஃபைர் மாவட்டத்தின் கீழ் உள்ள லாங்மாத்ரா பகுதி அதன் முதல் மாம்பழத் திருவிழாவைக் கொண்டாடியது.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் 42வது சட்டப் பிரிவின் கீழ் அதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, சட்டத்தின் இரண்டாவது அட்டவணையில் NSDL என்ற பண வழங்கீட்டு வங்கியினைச் சேர்த்து உள்ளது.
  • இந்தியப் படைப்பாக்க தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (IICT) மும்பையில் உள்ள NFDC வளாகத்தில் தனது முதல் வளாகத்தினைத் தொடங்கியது.
  • உலகில் ஆண்டுதோறும் ஜூலை 16 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) பாராட்டு தினமானது நமது உலகத்தினை வடிவமைப்பதில் செயற்கை நுண்ணறிவின் மாறுதல் மிக்க ஆற்றலைக் கொண்டாடுகிறது.
  • மத்திய சட்டத் துறை அமைச்சகமானது, புது டெல்லியில் உள்ள சாஸ்திரி பவனில் மகிளா ஆரோக்கிய கக்ஸ் எனும் உடற்பயிற்சிக் கூடத்தினைத் துவக்கியது.
    • இது அரசாங்க வளாகங்களுக்குள் பணியிட நல்வாழ்வை உருவாக்குவதற்கான முதல் வகையான முன்னெடுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்