தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுமின் திட்டத்தின் (KKNPP) 5வது அலகில் அணுக் கரு உலை அழுத்தக் கலனை (RPV) பொருத்தும் பணியை இந்திய அணுமின் கழகம் (NPCIL) நிறைவு செய்துள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் தொடங்கும் வகையில், இந்தியாவின் துணைத் தலைமை வழக்கறிஞராக துஷார் மேத்தாவை மேலும் மூன்றாண்டுகளுக்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு மீண்டும் நியமித்துள்ளது.
இந்தியாவின் தலைமை வழக்குரைஞருக்கு அடுத்தபடியாக மத்திய அரசின் இரண்டாவது உயர்மட்ட சட்ட அதிகாரியாக இந்தியாவின் துணைத் தலைமை வழக்கறிஞர் செயல்படுகிறார்.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தொழிற்கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்; அதே சமயம் அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பிரதமர் பதவியில் தொடருவார்.
ஒடிசாவின் பாலாங்கிர் பகுதியிலிருந்து ஆஸ்திரியாவிற்கு 22.6 மெட்ரிக் டன் எடையுள்ள உலர்த்தப்பட்ட முழு முட்டைப் பொடியின் முதல் வணிக ரீதியான ஏற்றுமதியை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) சாத்தியப்படுத்தியுள்ளது.
புது தில்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணாவை மாநில அரசு நியமித்துள்ளது.
இச்சிறப்புப் பிரதிநிதி மத்திய அமைச்சகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு உள்கட்டமைப்பு, நிதி, மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் மாநிலம் தொடர்பான கொள்கை விவகாரங்களைப் பின்தொடருவார்.
புதுச்சேரியின் பூரணாங்குப்பத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான மற்றும் 2 ஏக்கர் பரப்பளவிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பல்லவர் கால முழியன் குளத்தை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
இக்குளம் பாரம்பரியமாக கிராமத்தின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாகச் செயல்பட்டு வருகிறது; மேலும் இது நான்கு இயற்கை நீரூற்றுக் கிணறுகளைக் கொண்டுள்ளது.