தமிழ்நாட்டில் 10 வேளாண் பொருட்களுக்குப் புவிசார் குறியீடு பெறுவதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது, இதற்காக ₹30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் பரிமிளகாய், பொய்யூர் கத்திரி, சிதம்பரம் கருப்பு உளுந்து, கருமந்துறை கடுக்காய், திருவையாறு இலை வாழை, எறையூர் கருணை கிழங்கு, கடலூர் வெட்டிவேர், மணப்பாறை கத்திரி, ஊட்டி பூண்டு மற்றும் ஜவ்வாது பேய் எள் ஆகியவை இந்த பொருட்களில் அடங்கும்.
தெலங்கானாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய நன்னீர் பூக்கும் தாவர இனமான அம்மானியா தெலங்கானென்சிஸ் என்பது லித்ரேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வருடாந்திர, குடில் போன்ற அமைப்பு கொண்ட, பகுதி நீர்வாழ் தாவரமாகும்.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் சாம்டெல் ஏவியோனிக்ஸ் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான சாம்டெல் HAL டிஸ்ப்ளே சிஸ்டம்ஸ் லிமிடெட் (SHDS), ஹரியானாவின் குருகிராமில் ஒரு புதிய பாதுகாப்பு ஏவியோனிக்ஸ் உற்பத்தி ஆலையைத் திறந்துள்ளது.
போர் விமானங்களுக்கான பல்பணித் திரைகளை (MFDகள்) உள்நாட்டிலேயே வடிவமைத்து, தகுதிப்படுத்தி, தொடர் உற்பத்தி செய்யும் பாதுகாப்பு ஏவியோனிக்ஸ் துறையில் இந்தியாவின் முதல் பொது-தனியார் கூட்டு நிறுவனம் SHDS ஆகும்.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள நாம்டாபா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில், கரண்டி வால் கொண்ட அந்திப் பருந்து (கைனகந்தா பேசிகுட்டாடா) எனப்படும் தட்டான் பூச்சியின் முதல் சரிபார்க்கக்கூடிய புகைப்பட ஆதாரம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இது இந்தியாவின் தட்டான் பூச்சிகள் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளது.
அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, 2026 பிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு அர்ஜென்டினாவை கொண்டு சேர்த்த பின்பு, 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
உஸ்பெகிஸ்தான் தனது உயரிய சிவிலியன் விருதான ஆர்டர் ஆஃப் ஓலி தாராஜாலி தோஸ்ட்லிக் என்பதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கியது.