July 11 , 2021
1448 days
645
- சில திட்டங்களின் தரநிலைகள் மீதான பாதுகாப்பினைக் கருதி அதிஉயர் வகை வானளாவியக் கட்டிடங்களைக் கட்டமைப்பதற்கு சீனா தடை விதித்துள்ளது.
- 500 மீட்டருக்கு மேல் உயரமுடைய கட்டிடங்களுக்கு இது பொருந்தும்.
- கேரள அரசானது தனது சொந்த இணையதள ஒளிபரப்பு சேவை வழங்கும் தளத்திற்கான (OTT - over-the-top) ஒரு திட்டத்தினை முன்மொழிந்துள்ளது.
- நவம்பர் 01 ஆம் தேதிக்குள் இதனைத் தொடங்குவதற்கு அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
- ‘லாம்ப்டா’ எனப்படும் ஒரு புதிய கோவிட்-19 வைரசானது டெல்டா மாற்றுருவை விட மிகவும் ஆபத்தானதாகும்.
- ஐக்கிய ராஜ்ஜியத்தின் சுகாதார அமைச்சகம் இதனைத் தெரிவித்துள்ளது.
Post Views:
645