TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 28 , 2025 2 days 78 0
  • செங்கல்பட்டு, சென்னை, கடலூர், திண்டுக்கல், பெரம்பலூர், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, தூத்துக்குடி, திருவாரூர் மற்றும் விழுப்புரம் போன்ற பல மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 11 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
  • உலகின் மிகவும் உயரமான சிகரமான எவரெஸ்ட்டில் ஏறிய முதல் மத்தியத் தொழில் துறைப் பாதுகாப்புப் படை வீரர் (CISF) என்ற பெருமையைத் துணை ஆய்வாளர் கீதா சமோட்டா பெற்றுள்ளார்.
  • இந்தியாவிலேயே முதன்முறையாக, கேரளாவில் உள்ள அனைத்து 10 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கும் எந்திரவியல் (ரோபோட்டிக்ஸ்) கல்வியானது தற்போது ஒரு கட்டாயப் பாடமாக ஆக்கப்பட்டுள்ளது.
  • பிரசவம் தொடர்பான இந்த மிகக் கடுமையான மற்றும் தடுக்கக்கூடிய காயங்களை அகற்றுவதற்காக, ஒவ்வோர் ஆண்டும் மே 23 ஆம் தேதியன்று, மகப்பேறின் போது பிறப்புறுப்பில் ஏற்படும் காயத்தினை தடுப்பதற்கான சர்வதேச தினம் அனுசரிக்கப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்