TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 1 , 2025 3 days 50 0
  • சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமி கோவிலின் ஓதுவாராக பார்வைத் திறனற்ற பெண்மணி S.S. பிரியவதனா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நீலகிரியில் ஆண்டுதோறும் நடைபெறும் கோடை காலத் திருவிழாவின் இறுதிக் கட்ட நிகழ்வின் ஒரு பகுதியாக குன்னூர் அருகே உள்ள காட்டேரி பூங்காவில் முதல் தோட்டக் கலைப் பயிர்கள் கண்காட்சி தொடங்கப்பட்டது.
  • வேலூர் மாவட்டத்தில் K.V. குப்பம், திருச்சி மாவட்டத்தில் துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் ஆகிய நான்கு மாவட்டங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நிறுவப்பட உள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
  • முட்டுக்காட்டில் அமைக்கப்பட உள்ள கலைஞர் மாநாட்டு மையக் கட்டுமானத்தின் மீதான அடிக்கல்லை தமிழக முதல்வர் நாட்டினார்.
  • உணவுப் பதப்படுத்தும் தொழில்துறைகள் அமைச்சகம் (MoFPI), பீகார் அரசு, APEDA மற்றும் இந்திய வர்த்தக மேம்பாட்டுச் சபை (TPCI) ஆகியவை பீகாரின் பாட்னாவில் முதல் சர்வதேச வாங்குவோர்-விற்பனையாளர் சந்திப்பை (IBSM) நடத்தின.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST), சிமெண்ட் தொழில்துறையை முக்கிய இலக்காகக் கொண்ட ஐந்து கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாட்டு (CCU) சோதனைப் அமைப்புகளைக் கொண்ட நாட்டின் முதல் தொகுப்பினைத் தொடங்கியுள்ளது.
  • நாட்டின் மிகவும் முதன்மையான மலையேற்றத்தின் சாகச நிறுவனங்களைச் சேர்ந்த பயிற்றுனர்களைக் கொண்ட கூட்டுப் பயணக் குழுவானது வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தில் (8,848.86 மீட்டர்) ஏறியுள்ளது.
    • இந்த மலையேற்ற நிறுவனங்கள் Jawahar Institute of Mountaineering & Winter Sports (JIM&WS), பஹல்காம்; Nehru Institute of Mountaineering (NIM), உத்தரகாசி; மற்றும் Himalayan Mountaineering Institute (HMI), டார்ஜீலிங் ஆகியனவாகும்.
  • அகர்தலா (திரிபுரா) மற்றும் கௌஹாத்தி (அசாம்) ஆகியவற்றுக்கிடையேயான புதிய இரயில் சேவையைத் தொடங்குவதற்கு என இரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்து உள்ளது.
  • பிரிகேடியர் ஜெனரல் அமிதாப் ஜா மற்றும் ஹவில்தார் சஞ்சய் சிங் ஆகிய இரண்டு இந்திய அமைதி காப்புப் படை வீரர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப் பின்னதாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மதிப்புமிக்க டேக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் பதக்கம் வழங்கப்பட்டது.
  • நேபாள மலையேற்ற வழிகாட்டியான 55 வயதான காமி ரீட்டா ஷெர்பா, எவரெஸ்ட் சிகரத்தில் 31வது முறையாக ஏறி, மலையின் சிகரத்திற்கு மிகவும் வெற்றிகரமானப் பயணங்களை மேற்கொண்டவர் என்ற தனது சொந்தச் சாதனையை முறியடித்தார்.
  • புகைபிடிப்பவர்களுக்கு அதன் பெரும் தீங்கினைக் குறைக்கும் கருவியாக மின்னணு சிகரெட்டுகளைப் பயன்படுதுவதன் சாத்தியமான நன்மைகள் குறித்த பெரும் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக மே 30 ஆம் தேதியன்று உலக மின்னணு சிகரெட்டுகள் தினம் அனுசரிக்கப்பட்டது.
    • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “20 Years of Facts” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்