சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமி கோவிலின் ஓதுவாராக பார்வைத் திறனற்ற பெண்மணி S.S. பிரியவதனா நியமிக்கப்பட்டுள்ளார்.
நீலகிரியில் ஆண்டுதோறும் நடைபெறும் கோடை காலத் திருவிழாவின் இறுதிக் கட்ட நிகழ்வின் ஒரு பகுதியாக குன்னூர் அருகே உள்ள காட்டேரி பூங்காவில் முதல் தோட்டக் கலைப் பயிர்கள் கண்காட்சி தொடங்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் K.V. குப்பம், திருச்சி மாவட்டத்தில் துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் ஆகிய நான்கு மாவட்டங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நிறுவப்பட உள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
முட்டுக்காட்டில் அமைக்கப்பட உள்ள கலைஞர் மாநாட்டு மையக் கட்டுமானத்தின் மீதான அடிக்கல்லை தமிழக முதல்வர் நாட்டினார்.
உணவுப் பதப்படுத்தும் தொழில்துறைகள் அமைச்சகம் (MoFPI), பீகார் அரசு, APEDA மற்றும் இந்திய வர்த்தக மேம்பாட்டுச் சபை (TPCI) ஆகியவை பீகாரின் பாட்னாவில் முதல் சர்வதேச வாங்குவோர்-விற்பனையாளர் சந்திப்பை (IBSM) நடத்தின.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST), சிமெண்ட் தொழில்துறையை முக்கிய இலக்காகக் கொண்ட ஐந்து கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாட்டு (CCU) சோதனைப் அமைப்புகளைக் கொண்ட நாட்டின் முதல் தொகுப்பினைத் தொடங்கியுள்ளது.
நாட்டின் மிகவும் முதன்மையான மலையேற்றத்தின் சாகச நிறுவனங்களைச் சேர்ந்த பயிற்றுனர்களைக் கொண்ட கூட்டுப் பயணக் குழுவானது வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தில் (8,848.86 மீட்டர்) ஏறியுள்ளது.
இந்த மலையேற்ற நிறுவனங்கள் Jawahar Institute of Mountaineering & Winter Sports (JIM&WS), பஹல்காம்; Nehru Institute of Mountaineering (NIM), உத்தரகாசி; மற்றும் Himalayan Mountaineering Institute (HMI), டார்ஜீலிங் ஆகியனவாகும்.
அகர்தலா (திரிபுரா) மற்றும் கௌஹாத்தி (அசாம்) ஆகியவற்றுக்கிடையேயான புதிய இரயில் சேவையைத் தொடங்குவதற்கு என இரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்து உள்ளது.
பிரிகேடியர் ஜெனரல் அமிதாப் ஜா மற்றும் ஹவில்தார் சஞ்சய் சிங் ஆகிய இரண்டு இந்திய அமைதி காப்புப் படை வீரர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப் பின்னதாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மதிப்புமிக்க டேக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் பதக்கம் வழங்கப்பட்டது.
நேபாள மலையேற்ற வழிகாட்டியான 55 வயதான காமி ரீட்டா ஷெர்பா, எவரெஸ்ட் சிகரத்தில் 31வது முறையாக ஏறி, மலையின் சிகரத்திற்கு மிகவும் வெற்றிகரமானப் பயணங்களை மேற்கொண்டவர் என்ற தனது சொந்தச் சாதனையை முறியடித்தார்.
புகைபிடிப்பவர்களுக்கு அதன் பெரும் தீங்கினைக் குறைக்கும் கருவியாக மின்னணு சிகரெட்டுகளைப் பயன்படுதுவதன் சாத்தியமான நன்மைகள் குறித்த பெரும் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக மே 30 ஆம் தேதியன்று உலக மின்னணு சிகரெட்டுகள் தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “20 Years of Facts” என்பதாகும்.