சென்னையில் உள்ள மத்திய செம்மொழி தமிழ் நிறுவனம் (CICT) ஆனது, திருக்குறளை குருக், கோண்டி, மால்டோ மற்றும் பிரஹுய் ஆகிய நான்கு நடுத்தர மற்றும் சிறிய திராவிட மொழிகளில் மொழி பெயர்க்கத் தொடங்கியுள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த விஸ்வநாத் கார்த்திகே பதகாந்தி (16 வயது நபர்) ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மிக உயரமான புகழ்பெற்ற 7 மலைச் சிகரங்களில் ஏறிய இளம் இந்தியர் மற்றும் உலகின் இரண்டாவது இளம் நபர் என்ற பெருமையினைப் பெற்று உள்ளார்.
ஒன்றியப் பிரதேச மாவட்டமான டையூ, 11.88 மெகாவாட் உற்பத்தித் திறனை அடைந்து சூரியசக்தி மூலம் அதன் மின்சாரத் தேவைகளில் 100 சதவீதத்தினைப் பூர்த்தி செய்து கொள்ளும் இந்தியாவில் முதல் பகுதியாக மாறியுள்ளது.
மத்தியப் புலனாய்வுப் பிரிவு (CBI) ஆனது, சக்ரா-V நடவடிக்கையின் கீழ் ஜப்பானியக் குடிமக்களை இலக்காக கொண்ட ஒரு பன்னாட்டு இணையவெளிக் குற்றக் குழுவின் ஆறு உறுப்பினர்களைக் கைது செய்துள்ளது.
அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்புச் சேவை வழங்கீட்டு நிறுவனமான BSNL ஆனது, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடைந்த காலாண்டில் 280 கோடி ரூபாய் நிகர இலாபத்தை ஈட்டியதோடு, இது 18 ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளில் நேர்மறையான பணப் புழக்கங்களைக் குறிக்கிறது.
ஏர்பஸ் மற்றும் டாடா குழுமத்தின் புகழ்மிக்க வான்வெளி உற்பத்திப் பிரிவான டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் (TASL) நிறுவனமானது, கர்நாடகாவின் கோலார் எனுமிடத்தில் H125 ஹெலிகாப்டர்களுக்காக என்று இந்தியாவின் முதலாவது தனியார் நிறுவனத்தின் இறுதிகட்ட ஒருங்குசேர்ப்பு மையத்தினை (FAL) அமைக்க உள்ளது.