தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, நிதிசார் குற்றங்களுக்கு எதிரான ஒரு பெரும் போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்பிற்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்தத் தனியார் விண்வெளி நுட்பம் சார் புத்தொழில் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ், இந்தியாவின் முதல் மின்சார மோட்டார் மூலம் இயக்கப்படும் பகுதியளவு மீக்குளிர் நிலையிலான ஏவுகல இயந்திரத்தினை மிகவும் வெற்றிகரமாக சோதனை செய்து ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (DRDO), உத்தி சார் மற்றும் பாதுகாப்புப் பயன்பாடுகளுக்காக என உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட குவாண்டம் திறன்களை வலுப்படுத்துவதற்காக, டெல்லியில் குவாண்டம் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தினை (QTRC) திறந்து வைத்துள்ளது.