தமிழ்நாடு மாநில அரசாங்கமானது, முன்னாள் முதல்வர் M. கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 03 ஆம் தேதியன்று, "செம்மொழி தின விழாவை" கொண்டாடியது.
பூந்தமல்லி-சுங்குவார்சத்திரம்-பரந்தூர் வழித்தட சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தினை உருவாக்க தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியான ஒரு ஒப்புதலை அளித்துள்ளது.
1972 ஆம் ஆண்டில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் விதிமுறைகளின்படி, மகாராஷ்டிர மாநிலத்தின் தடோபா-அந்தாரி புலிகள் வளங்காப்பகத்துடன் தெலங்கானா மாநிலத்திலுள்ள கவால் புலிகள் வழித் தடத்தினை இணைக்கச் செய்யும் புலிகள் வழித்தடப் பகுதியை தெலுங்கானா மாநில அரசு அறிவித்து ள்ளது.
ஸ்பைடர் வெப் நடவடிக்கையின் (Operation Spider Web) கீழ், உக்ரேனிய நாட்டு ஆளில்லா வகை விமானங்களின் திரளானது ரஷ்யாவின் எல்லைகளுக்குள் ஊடுருவி அந்நாட்டு ராணுவ விமான தளங்களைத் தாக்கியது.
சமீபத்தில் விருது வென்ற புகழ்மிக்க வனவிலங்குப் புகைப்படக் கலைஞரும் மூத்தப் பத்திரிகையாளருமான சன்ஜோய் மோங்கா காலமானார்.
2005 ஆம் ஆண்டில், மோங்கா ‘Wings – Birds of India’ என்று அழைக்கப்படும் வருடாந்திரப் பாரம்பரிய நிகழ்ச்சியாக மாறியுள்ள மும்பையின் முதல் பறவைப் பந்தயத்தினை அறிமுகப்படுத்தினார்.
உலக மிதிவண்டி தினம் ஆனது, மேம்பாடு, நிலைத்தன்மை மற்றும் உடல்நல ஆரோக்கியத்தில் மிதிவண்டியின் பங்கினை முன்னிலைப்படுத்துவதற்காக ஜூன் 03 ஆம் தேதியன்று ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், ஆக்கிரமிப்பு காரணமாக உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் எதிர்கொண்ட வேதனையினை மிக நன்கு அங்கீகரிப்பதற்காகவும் வேண்டி ஆண்டுதோறும் ஜூன் 04 ஆம் தேதியன்று "ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகளுக்கான சர்வதேச தினம்" ஆனது அனுசரிக்கப் படுகிறது.
குஜராத்தின் அஹமதாபாத்தில் நடந்த 2025 ஆண்டின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது.