TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 6 , 2025 7 days 34 0
  • உலகின் மிகவும் சக்தி வாய்ந்த சரக்கு இரயில் என்ஜின்களில் ஒன்றான, இந்தியாவின் முதல் D9 - 9000 HP மின்சார இரயில் என்ஜினைப் பிரதமர் குஜராத்தின் டஹோட் என்ற இடத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • இந்தியத் தர நிர்ணயச் சபையின் (QCI) புதிய ஒருங்கிணைந்த தலைமையகம் ஆனது புது டெல்லியில் உள்ள உலக வர்த்தக மையத்தில் திறக்கப்பட்டது.
  • இந்திய இராணுவம் ஆனது, 'சத்பாவனா நடவடிக்கை'யின் ('Operation Sadbhavana) கீழ் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் என்னுமிடத்தில் 'பஞ்ச்ஷுல் பல்ஸ்' எனப் படும் தனது முதல் FM வானொலி நிலையத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இந்தியா-மங்கோலியா ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியான 17வது நொமாடிக் எலிபாண்ட் (Nomadic Elephant) பயிற்சியானது மங்கோலிய நாட்டில் உலான்பாதரில் நடத்தப்பட உள்ளது.
  • சத்தீஸ்கரின் நவா ராய்ப்பூரில் இந்தியா தனது முதல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தினை (SEZ) நிறுவ உள்ளது.
  • இந்தியாவின் அகமதாபாத் நகரத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான ஆசியப் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
  • உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இந்திய மொழிகளுக்கான 'பாரத் ஜென்' (BharatGen) எனப்படும் இந்தியாவின் முதல் வகையான பல் நோக்குப் பெரிய மொழி மாதிரி (LLM) ஆனது, "பாரத் ஜென் உச்சி மாநாட்டில்" என்ற அறிமுகப்படுத்தப்பட்டது.
  • கருக்கலைப்பு மாத்திரையை உருவாக்கிய பிரான்சு நாட்டின் அறிவியல் ஆய்வாளர் எட்டியென்-எமிலி பெளலியூ சமீபத்தில் காலமானார்.
  • மனிதரல்லாத விலங்குகளில் அவற்றின் இனத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டும் தற்சிறப்பினத் தன்மையினைக் கண்டனம் செய்யும் வகையில் ஜூன் 05 ஆம் தேதி உலகத் தற்சிறப்பினத் தன்மை (Speciesism) எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்