உலகின் மிகவும் சக்தி வாய்ந்த சரக்கு இரயில் என்ஜின்களில் ஒன்றான, இந்தியாவின் முதல் D9 - 9000 HP மின்சார இரயில் என்ஜினைப் பிரதமர் குஜராத்தின் டஹோட் என்ற இடத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்தியத் தர நிர்ணயச் சபையின் (QCI) புதிய ஒருங்கிணைந்த தலைமையகம் ஆனது புது டெல்லியில் உள்ள உலக வர்த்தக மையத்தில் திறக்கப்பட்டது.
இந்திய இராணுவம் ஆனது, 'சத்பாவனா நடவடிக்கை'யின் ('Operation Sadbhavana) கீழ் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் என்னுமிடத்தில் 'பஞ்ச்ஷுல் பல்ஸ்' எனப் படும் தனது முதல் FM வானொலி நிலையத்தினைத் தொடங்கியுள்ளது.
இந்தியா-மங்கோலியா ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியான 17வது நொமாடிக் எலிபாண்ட் (Nomadic Elephant) பயிற்சியானது மங்கோலிய நாட்டில் உலான்பாதரில் நடத்தப்பட உள்ளது.
சத்தீஸ்கரின் நவா ராய்ப்பூரில் இந்தியா தனது முதல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தினை (SEZ) நிறுவ உள்ளது.
இந்தியாவின் அகமதாபாத் நகரத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான ஆசியப் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இந்திய மொழிகளுக்கான 'பாரத் ஜென்' (BharatGen) எனப்படும் இந்தியாவின் முதல் வகையான பல் நோக்குப் பெரிய மொழி மாதிரி (LLM) ஆனது, "பாரத் ஜென் உச்சி மாநாட்டில்" என்ற அறிமுகப்படுத்தப்பட்டது.
கருக்கலைப்பு மாத்திரையை உருவாக்கிய பிரான்சு நாட்டின் அறிவியல் ஆய்வாளர் எட்டியென்-எமிலி பெளலியூ சமீபத்தில் காலமானார்.
மனிதரல்லாத விலங்குகளில் அவற்றின் இனத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டும் தற்சிறப்பினத் தன்மையினைக் கண்டனம் செய்யும் வகையில் ஜூன் 05 ஆம் தேதி உலகத் தற்சிறப்பினத் தன்மை (Speciesism) எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.