TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 7 , 2025 6 days 45 0
  • பெல்ஜியம் புரூசல்ஸ் நகரில் நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்தின் போது, ​​2025-2028 ஆகிய காலக் கட்டத்திற்கான சர்வதேச நிர்வாக அறிவியல் கல்வி நிறுவனத்தின் (IIAS) தலைமைப் பொறுப்பினை இந்தியா வென்றது.
  • சீன நாடானது சமீபத்தில் உலகின் முதல் அணுக்கரு இணைவு-பிளவு சார்ந்தக் கலப்பு அணுமின் நிலையத்தினைக் கட்டமைக்கும் திட்டத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது என்ற நிலையில் மாண்டரின் மொழியில் "தீப்பொறி" என்று பொருள்படும் வகையில் ஜிங்குவோ என்று அதற்குப் பெயரிடப் பட்டுள்ளது.
  • இந்திய எண்ணெய் உற்பத்திக் கழகமானது, 2027 ஆம் ஆண்டிற்குள் ஆண்டுதோறும் 10,000 டன் உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டு, அரியானாவில் அதன் பானிபட் சுத்திகரிப்பு நிலையத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் ஆலையை அமைத்து வருகிறது.
  • இந்தியா மற்றும் நார்வே ஆகிய இரு நாடுகள் அதன் முதல் துருவப் பகுதி ஆராய்ச்சி கப்பலை (PRV) உள்நாட்டிலேயே உருவாக்குவதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்தியாவின் ஊதாப் புரட்சியில் அந்தப் பிராந்தியத்தின் அதிகரித்து வரும் பங்கைக் கொண்டாடும் வகையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் படேர்வா எனுமிடத்தில் 3வது லாவெண்டர் விழா நடைபெற்றது.
  • ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவரான குமார் மங்கலம் பிர்லா, அமெரிக்க-இந்திய உத்தி சார் கூட்டாண்மை மன்றத்தின (USISPF) 8வது வருடாந்திர தலைமைத்துவ உச்சி மாநாட்டில் உலகளாவிய தலைமைத்துவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்