கல்வராயன் மலைப் பகுதியில் வசித்து வரும் பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த A. இராஜேஸ்வரி என்பவர் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் இடம் பெற்று, அரசு பழங்குடியின உறைவிடப் பள்ளியில் படித்து தற்போது IIT கல்லூரியில் சேர தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் தமிழக மாணவி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
சென்னை மெட்ரோவாட்டர் நிறுவனமானது நகரம் முழுவதும் 50 முக்கிய இடங்களில் குடிநீர் வழங்கீட்டிற்கான ஸ்மார்ட் ATM இயந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் (EAC-PM) புதியத் தலைவராக பொருளாதார நிபுணர் S. மகேந்திர தேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வால்மார்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான இணையவழி வணிக நிறுவனமான பிளிப் கார்ட், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கி சாரா நிதி நிறுவன (NBFC) உரிமத்தைப் பெற்றுள்ளது என்பதோடு, இந்தியாவில் இதுவே இம்மாதிரியில் முதல் முறை ஆகும்.
TVS மோட்டார் நிறுவனமானது, சர் ரால்ஃப் ஸ்பெத்துக்கு அடுத்தபடியாக, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் பொறுப்பேற்கும் வகையில் சுதர்சன் வேணுவை அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமித்துள்ளது.
புகழ்பெற்றச் சூழலியல் நிபுணர் பேராசிரியர் மாதவ் காட்கிலின் "A Walk Up the Hill: Living with People and Nature" என்ற சுயசரிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆனது தற்போது சென்னையில் வெளியிடப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடியில் ஒரு பெரிய ஃபிளமிங்கோ சரணாலயத்தினை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி மேயர், நகரத்தில் நீடித்த மற்றும் நிலையான கழிவு மேலாண்மைக்காக ‘தூய்மை மிஷன்’ எனும் திட்டத்தினைத் தொடங்கி வைத்துள்ளார்.
மீன்வள மானியங்கள் தொடர்பான ஒரு ஒப்பந்தத்தினை அதிகாரப் பூர்வமாக ஏற்றுக் கொண்ட உலக வர்த்தக அமைப்பின் (WTO) 101வது உறுப்பினராக நிகரகுவா மாறி உள்ளது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான இத்தாலியின் மவுண்ட் எட்னா சமீபத்தில் வெடித்துள்ளது.