மத்திய மெட்ரோ இரயில் நிலையத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘சென்னை புத்தகப் பூங்காவை’ தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
தேசிய e-Vidhan செயலி (NeVA) தளத்தினை ஏற்றுக் கொண்ட நாட்டின் 19வது சட்ட மன்றமாகப் புதுச்சேரி மாறியுள்ளது.
உலகின் மிகப்பெரியதான கண்டெய்னர் கப்பலான MSC IRINA, சமீபத்தில் கேரளாவின் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.
நாட்டில் 24 மணி நேரமும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன்களை உறுதி செய்வதற்காக மணிக்கு 30 ஜிகாவாட் (GWh) அளவிலான உற்பத்தித் திறன் கொண்ட புதிய மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை (BESS) உருவாக்குவதற்காக 5,400 கோடி ரூபாய் மதிப்பிலான சாத்தியக்கூறு இடைவெளி நிதியை (VGF) இந்திய அரசு அறிவித்து உள்ளது.
மும்பையில் நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர், நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுச் சபையின் (FSDC) 29வது கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
இமயமலையில் மழைப்பொழிவால் ஏற்படும் நிலச்சரிவுகளுக்கான முன் எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய கட்டமைப்பை ரூர்க்கேயின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் உள்ள பேரிடர் தணிப்பு மற்றும் மேலாண்மை மையத்தின் (CoEDMM) ஆராய்ச்சியாளர்கள் அறிமுகப் படுத்தி உள்ளனர்.
ஒரு பெருநகரத்தின் விளிம்போரப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான (80-85) சிவிங்கிப் புலிகள் சுதந்திரமாக வாழ்கின்ற பகுதி என்ற அடிப்படையில் மும்பையை விஞ்சி, பெங்களூரு நகரானது, அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் 'சிவிங்கிப் புலியின் தலைநகராக' மாறியுள்ளது.
இஸ்ரேலிய நாட்டின் கடற்படையானது, மனிதாபிமான உதவிக்கான முக்கிய நுழைவு மையமாக இருக்கும் கப்பல் துறைகளைக் குறி வைத்து, ஏமன் துறைமுக நகரமான ஹோடைடாவின் மீது தனது முதல் நேரடி கடற்படைத் தாக்குதலை நடத்தியது.
இரு நாடுகளுக்கும் இடையே முன்னர் கையெழுத்திடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் கீழ் ஈரானில் எட்டு அணு மின் நிலையங்களை ரஷ்யா கட்டமைக்க உள்ளது.
விமானப் போக்குவரத்து, கண்காணிப்புத் திரைகள் மற்றும் தொழில்துறை கட்டுப்பாட்டு அமைப்புகள் போன்ற முக்கியமான துறைகளில் பயன்படுத்துவதுடன், உலகளவில் முதன்முறையாக, சீனா பைனரி (இரும வரிசை) அல்லாத செயற்கை நுண்ணறிவு சில்லுகளை பெரிய அளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.