கடவுச் சீட்டிற்கு விண்ணப்பிக்கும் முன் ஒரு பெண் தனது கணவரின் அனுமதியைப் பெற்று அவரது கையொப்பத்தைப் பெற வேண்டிய அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது, சுமார் 120 கிலோ மீட்டர் மற்றும் 300 கிலோ மீட்டர் என்ற நீட்டிக்கப் பட்ட ஏவுதல் வரம்புகளுடன் கூடிய பினாகா ஏவுகல அமைப்பின் புதிய வகைகளை விரைவில் தயாரிக்கத் தொடங்க உள்ளது.
3.5 பில்லியன் பயனர் தரவுகள் திருடப்பட்ட இணையதள வரலாற்றில் இது வரையில் பதிவாகாத மிகப்பெரியத் தகவல் மீறல் நிகழ்வு ஒன்று இணைய வெளிப் பாதுகாப்பு நிபுணர்களால் கண்டறியப் பட்டுள்ளது.
இந்தியாவில் தொலைத்தொடர்பு சந்தாதாரர் பரவலானது, இரண்டாவது முறையாக 1.2 பில்லியன் பயனர் எண்ணிக்கையினைத் தாண்டி, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் 1,201.22 மில்லியன் எண்ணிக்கையினை எட்டியுள்ளது.
இந்தியாவின் முதல் 3-நானோமீட்டர் அளவிலான சில்லு வடிவமைப்பு மையங்கள் நொய்டா மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் தொடங்கப் பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டு தெற்காசிய WAN-IFRA எண்ணிம ஊடக விருதுகள் விழாவில், பல்வேறு விருது பிரிவுகளில் 10 விருதுகளை வென்ற தி இந்து பத்திரிக்கை , 2025 ஆம் ஆண்டின் எண்ணிம ஊடக விருதுகளின் சாம்பியன் என்ற பட்டத்தினை வென்றது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் "லக்சயா குப்பை நிரப்பு தளமற்ற பகுதி" திட்டத்தின் கீழ், குஜராத்தின் ராஜ்கோட் பல தசாப்தங்களாக இருந்த குப்பை கொட்டும் இடத்தினை சுமார் 20 ஏக்கர் பசுமையான நகர்ப்புற காடாக மாற்றி உள்ளது.
பிரான்சில் நடைபெற்ற சமீபத்திய ஐக்கிய நாடுகள் சபையின் பெருங்கடல் மீதான ஒரு மாநாட்டின் (UNOC) போது, புவியின் 56 நாடுகள் தேசிய அதிகார வரம்பிற்கு அப்பால் உள்ள பல்லுயிர்ப் பெருக்கம் (BBNJ) ஒப்பந்தத்தினை அங்கீகரித்தன.
இது சட்டப்பூர்வமாகப் பிணைக்கப்படுவதற்கு 60 நாடுகளின் ஒப்புதல்கள் தேவை ஆகும்.