TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 30 , 2025 12 hrs 0 min 38 0
  • கர்நாடக இசைக் கலைஞர் மற்றும் வயலின் கலைஞர் ஜோதி கலைக்கு நாத பிரம்மம் யுனைடெட் கியான் அகாடமியானது நாத வினோதினி என்ற பட்டத்தை வழங்கியது.
  • பிராண்ட் ஃபைனான்ஸ் இந்தியா நிறுவனத்தின் முன்னணி 100 நிறுவனங்கள் என்ற ஒரு அறிக்கையின் படி, டாடா குழுமம் ஆனது 30 பில்லியன் டாலர் என்ற நிறுவன மதிப்பைக் கடந்து, இந்தியாவின் மிகவும் மதிப்பு மிக்க நிறுவனமாக மாறியது.
  • இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் "The One: Cricket, My Life and More" என்ற தலைப்பில் தனது சுயசரிதையை வெளியிட்டுள்ளார்.
  • குஜராத்தில் உள்ள அகமதாபாத், காந்திநகர் மற்றும் ஏக்தா நகர் ஆகிய இடங்களில் 2029 ஆம் ஆண்டு மதிப்புமிக்க உலக காவல் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை இந்தியா நடத்த உள்ளது.
  • இந்தியாவின் சுபன்ஷு சுக்லா விண்வெளிக்குச் சென்ற 634வது விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெற்று, மற்ற இந்தியர்களான ராகேஷ் சர்மா (138வது) மற்றும் கல்பனா சாவ்லா (366வது) ஆகியோர் அடங்கியப் பட்டியலில் இணைந்தார்.
  • கத்தாரில் உள்ள அல் உதெய்த் அமெரிக்க விமானப் படை தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உலகளாவிய எண்ணெய் விலைகள் ஒரே நாளில் (6%) மிக மோசமான சரிவை கண்டன.
  • சீனாவில் வௌவால் மூலம் பரவும் 20 புதிய வைரஸ்களை அறிவியலாளர்கள் கண்டு அறிந்துள்ளனர், அவற்றில் இரண்டு கொடிய நிபா மற்றும் ஹென்ட்ரா வைரஸ்களுடன் தொடர்புடையவையாகும்.
  • ஹெலன் கெல்லர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 27 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையினால் முதலாவது சர்வதேச காது கேட்கும் திறனற்றோர் மற்றும் பார்வைத் திறனற்றோர் தினம் அனுசரிக்கப்பட்டது.
  • சர்வதேச சேறு/மண் தினம் ஆனது ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 29 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.
  • நம் வாழ்வில் சமூக ஊடகங்களின் மிகப்பெரும் முக்கியத்துவத்தை அங்கீகரித்து ஊக்குவிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 30 ஆம் தேதியன்று சமூக ஊடக தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • சர்வதேச அன்னாசிப் பழ தினமானது ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 27 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
  • கேரள மாநில வனவிலங்கு வாரியமானது கண்ணூரில் உள்ள ஆரளம் வனவிலங்கு சரணாலயத்தை ஆரளம் வண்ணத்துப்பூச்சி சரணாலயம் என்று மறுபெயரிட்டுள்ளது.
    • இதன் மூலம், இது இந்தியாவில் மிக முழுமையாக வண்ணத்துப் பூச்சிகளுக்கென ஏற்படுத்தப் பட்ட முதல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்