TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 1 , 2025 3 days 36 0
  • உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் உள்ள மானசா தேவி கோவிலில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
  • மங்களூருவைச் சேர்ந்த ரெமோனா எவெட் பெரேரா என்ற மாணவி, 170 மணி நேரம்  பரதநாட்டியம் ஆடியதன் மூலம் தனது பெயரை உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெறச் செய்து சாதனைப் படைத்துள்ளார்.
  • இந்தியாவின் திவ்யான்ஷி பௌமிக், உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெற்ற 29வது ஆசிய இளையோர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 15 வயதிற்கு உட்பட்ட மகளிர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் பட்டத்தை வென்று வரலாறு ஒன்றைப் படைத்தார்.
  • ஏப்ரல் 22 ஆம் தேதியன்று நடைபெற்ற பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று தீவிரவாதிகள் மகாதேவ் நடவடிக்கை என்ற பெயரில் பாதுகாப்புப் படையினரால் ஜம்மு-காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  • இந்தியாவில் முதல் முயற்சியாக, மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் இந்தி மொழியில் கற்பிக்கும் ஒரு மருத்துவக் கல்லூரி நிறுவப்பட உள்ளது.
  • 12 இலத்தீன் அமெரிக்க நாடுகளின் கூட்டணியானது, Latam-GPT  எனப்படும் அந்தப் பிராந்தியத்தின் முதல் பெரிய செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரியினை 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிட  உள்ளது.
  • இந்திய இராணுவமானது சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு சியாங் மாவட்டத்தில் ட்ரோன் பிரஹார் எனும் பயிற்சியினை நடத்தியது.
  • சீனாவின் யான்டாய் நகரில்  உள்ள யான்டாய் பெங்லாய் சர்வதேச விமான நிலையம் (முனையம் 2) ஆனது 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் 6 மிக அழகான விமான நிலையங்களில் முதல் இடத்தைப் பிடித்தது.
  • இராணுவ மருத்துவமனை ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை (AHRR) அமைப்பானது, புது டெல்லியில் SHAPE 2025 (நிலையான மருத்துவமனை கட்டிடக்கலை, திட்டமிடல், உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்கள்) எனப்படும் முதல் ஆயுதப்படை தேசிய மாநாட்டை நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்