தமிழ்நாட்டின் முதல் பிரத்தியேகமான நாய்கள் பூங்கா உதகமண்டலத்தில் உள்ள ஆர்போரேட்டத்தில் (மரக் கருவூலத்தில்) திறக்கப்பட்டுள்ளது.
அடம்யா ரக விரைவு ரோந்து கப்பல்களின் மூன்றாவது கப்பலான ICGS அமுல்யா, கோவாவில் இந்திய கடலோரக் காவல்படையால் படையில் இணைக்கப்பட்டது.
அசாமின் கௌஹாத்தியில் உள்ள லோகப்ரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் இயற்கை கருத்துரு சார் விமான நிலைய முனையத்தை இந்தியப் பிரதமர் திறந்து வைத்தார்.
உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவைச் சேர்ந்த கோல்ஃப் வீரர் சுக்மான் சிங், உலகின் மிக நீண்ட காலமாக நடைபெறும் அமெச்சூர் (புது நிலை) போட்டியான 124வது அமெச்சூர் கோல்ஃப் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிப் பெற்றார்.
சிரியாவில் இஸ்லாமிய அரசின் (ISIS) இலக்குகளுக்கு எதிராக, ஹாக்ஐ ஸ்ட்ரைக் நடவடிக்கை எனும் ஒருங்கிணைந்த வான்வழித் தாக்குதல் தொடரினை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
குவாட் நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவை தங்கள் முதல் களப் பயிற்சியை (FTX) நடத்தின.
குவாமில் உள்ள ஆண்டர்சன் விமானப்படை தளத்தில் கிறிஸ்துமஸ் டிராப் நடவடிக்கையின் போது இந்தப் பயிற்சி நடைபெற்றது.
டிசம்பர் 21 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படும் உலக கூடைப்பந்து தினம் 2025 ஆனது, குழுப்பணி, உள்ளடக்கம், இளையோர் மேம்பாடு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவிப்பதற்காகவும் 1891 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் கூடைப் பந்து விளையாட்டைக் குறித்து அனுசரிக்கப்படுகிறது.