TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 27 , 2025 7 days 66 0
  • இந்தியப் பிரதமர் அசாமின் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள நம்ரூப்பில் 10,601 கோடி ரூபாய் மதிப்பிலான உரத் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.
  • இந்தியக் கடலோரக் காவல்படையானது சமுத்திர பிரதாப் என்ற அதன் முதல் மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பலை (PCV) அறிமுகப்படுத்தியது.
  • டேராடூனில் உள்ள இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி சபை (ICFRE), சுரங்க நோக்கங்களுக்காக ஆரவல்லி மலைத்தொடரின் ஒரு பகுதியாக தகுதி பெறும் மலைகள் குறித்து மாவட்ட வாரியான அறிக்கையைத் தயாரிக்க உள்ளது.
  • இராஜஸ்தான் சட்டமன்றச் சபாநாயகர் ஸ்ரீ வாசுதேவ் தேவ்னானி எழுதிய "Sanatan Sanskriti Ki Atal Drishti" என்ற புத்தகத்தை இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெளியிட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்