இந்திய ராணுவம் முதன்முதலில் சர்வதேச Military Adventure Challenge Cup (IMACC ) 2026 என்ற நிகழ்வினை கிழக்கு இமயமலைப் பகுதியில் நடத்தவுள்ளது.
பூடான், பிரேசில், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், நேபாளம், இலங்கை மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ராணுவ அணிகள் இந்த நிகழ்வில் பங்கேற்கும்.
இந்திய விமானப்படை (IAF), தாய்லாந்து விமானப்படை (RTAF) உடன் இணைந்து, இரு படைகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, செயல்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் இயங்குந் தன்மையை மேம்படுத்துவதற்காக ஒரு கூட்டு விமானப் பயிற்சியை நடத்தி வருகிறது.
இந்தியாவின் அசாமில் முதல் நீருக்கடியில் இரட்டைக் குழல் வடிவ சாலை மற்றும் ரயில் சுரங்கப்பாதை திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரம்மபுத்திரா நதியின் கீழ் கோப்பூர் (NH-15) மற்றும் நுமாலிகர் (NH-715) ஆகியவற்றை இணைக்கும் வகையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படும்.
மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக, WWF இந்தியா (இயற்கையான இந்தியாவிற்கான உலகளாவிய நிதியம்) உருவாக்கிய அதன் முதல் பல்லுயிர் மற்றும் கலாச்சார அம்ச வரைபடத்தை கோவா வெளியிட உள்ளது.
இந்த வரைபடம் பாரம்பரியக் கலை வடிவங்களையும், பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன, கடல் விலங்குகள், சதுப்புநிலங்கள் மற்றும் பூச்சிகள் உட்பட 48 பொதுவாகக் காணப்படும் உயிரினங்களையும் எடுத்துக்காட்டுகிறது
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), பிப்ரவரி 2026 இல் "அனைவருக்கும் யுவா AI" தேசிய AI எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், கௌஷல் ரத் என்ற கைபேசி வழி செயற்கை நுண்ணறிவு (AI) விழிப்புணர்வு முயற்சியைத் தொடங்கியது
மடகாஸ்கரில் உள்ள ஒரு முக்கியத் துறைமுக நகரமான டோமாசினா பகுதியில் கெசானி புயல் கரையைக் கடந்தது.
2026 ஆம் ஆண்டு BRICS தலைமையின் ஒரு பகுதியாக, இந்தியா முதல் BRICS ஷெர்பா மற்றும் துணை-ஷெர்பா கூட்டத்தை புது தில்லியில் நடத்தியது.
இந்தியாவின் தலைமைப் பொறுப்பின் கருத்துரு "Building for Resilience, Innovation, Cooperation and Sustainability" என்பதாகும்.
அறிவுசார் துணிச்சல், பெரும் அறிவியல் சிந்தனை, ஆர்வம் மற்றும் உண்மைக்கான தேடலைக் கொண்டாடும் வகையில், சார்லஸ் டார்வினின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12 அன்று டார்வின் தினம் அனுசரிக்கப் படுகிறது.