வாரணாசி ஒரு மணி நேரத்தில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் உலக சாதனைகளில் இடம்பிடித்தது.
ஒடிசாவில் உள்ள 301 கி.மீ குர்தா சாலை-பாலங்கிர் ரயில் பாதை 100 ஆண்டுகளுக்கும் மேலான தாமதத்திற்குப் பிறகு முழுமையாக நிறைவடையும் தருவாயில் உள்ளது.
இந்தியாவின் சிறுத்தை மறு அறிமுகம் திட்டத்தின் கீழ் போட்ஸ்வானாவிலிருந்து ஒன்பது சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன என்பதோடுஇதன் மூலம் நாட்டில் மொத்தச் சிறுத்தைகளின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.
IUCN செந்நிறப் பட்டியலில் அருகி வரும் இனமாக பட்டியலிடப்பட்டுள்ள அழிந்து வரும் வன ஆந்தை, மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் முதல் முறையாகக் தென்பட்டது.
14 வயது நிரம்பிய சிறுமிகளுக்கு, கார்டசில்-4 (Gardasil-4) தடுப்பூசியைப் வழங்கும் நாடு தழுவிய மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி இயக்கத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
இஸ்ரேலுடன் ஒருங்கிணைந்து அமெரிக்க இராணுவத்தால் ஈரானிய ராணுவக் கட்டமைப்புகளைக் குறிவைத்து, Operation Epic Fury எனும் ஒரு பெரிய கூட்டு இராணுவ நடவடிக்கை நடத்தப்பட்டது
உரிமையியல் பாதுகாப்பு, பேரிடர் தடுப்பு மற்றும் தயார்நிலை குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 ஆம் தேதி உலக உரிமையியல் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
உடல் பருமன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதைத் தடுக்கவும், நிர்வகிக்கவும் நடவடிக்கை எடுக்க ஊக்குவிக்கவும் உலக உடல் பருமன் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டுக்கான கருத்துரு “8 Billion Reasons to Act on Obesity” என்பதாகும்.