உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் உள்ள தபால் பயிற்சி மையத்தின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் ஒரு நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
2025-26 ஆம் நிதியாண்டில் 6.05 கிகாவாட் (GW) என்ற மிக உயர்ந்த காற்றாலை மின் உற்பத்தித் திறன் கூடுதலை இந்தியா பதிவு செய்துள்ள நிலையில்நாட்டின் மொத்த காற்றாலை மின் திறன் 56 கிகாவாட்டைக் கடந்துள்ளது.
CBI (மத்தியப் புலனாய்வுப் பிரிவு) முன்னாள் இயக்குனர் ஆர்.கே. ராகவனின் சுய சரிதையான "A Road Well Travelled" சென்னையில் வெளியிடப்பட்டது.
பழங்குடியின கலாச்சாரம், கைவினைப்பொருட்கள் மற்றும் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக மத்தியப் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப் பட்ட பாரத் பழங்குடியினர் திருவிழா 2026 ஆனது புதுதில்லியில் நடைபெற்றது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் வீராங்கனையான திவ்யா சிங், நேபாளத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,364 மீட்டர் உயரத்தில் உள்ள எவரெஸ்ட் அடிவார முகாமுக்கு 14 நாட்களில் மிதிவண்டியில் சென்று சாதனை படைத்தார்.
பாங்காக் நகரில் நடைபெற்ற உலக பாரா வில்வித்தை தொடரின் இறுதிப் போட்டியில், சர்வதேச வில்வித்தை போட்டியில் தங்கம் வென்ற உலகின் முதல் நான்கு உடல் உறுப்புகளையும் இழந்த (quadruple amputee) வீராங்கனை என்ற பெருமையை பாயல் நாக் பெற்றார்.
மனிதன், விலங்கு மற்றும் சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தை இணைத்து உலகளாவிய சுகாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் 2026 ஆம் ஆண்டின் 'One Health' உச்சி மாநாடானது, G7 தலைமையின் கீழ் பிரான்சின் லியோன் நகரில் நடைபெற்றது.
2026 ஆம் ஆண்டின் இந்திய தடகளத் தொடரில், முரளி ஸ்ரீசங்கர் 8.15 மீட்டர் தூரம் தாண்டி ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் வெற்றி பெற்றார்.