DRDO நிறுவனம் செயற்கை நுண்ணறிவால் இயங்கக் கூடிய, நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்களைக் கண்டறிவதற்காக ப்ரஜ்னா எனும் அமைப்பை உருவாக்கி, உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்தது.
கொள்கை உரையாடல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் (ORF) மற்றும் வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பு (RIS) ஆகியவை இணைந்து புது தில்லியில் தொடக்க பிரிக்ஸ் (BRICS) கல்வி மன்றத்தை தொடங்கின.
பெட்ரோகிளிஃப்ஸ் (பாறைகளில் செதுக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய வேலைப் பாடுகள்) எனப்படும் பழமையான பாறைச் சிற்பங்களைப் பாதுகாப்பதற்காக, இந்தியாவின் முதல் பெட்ரோகிளிஃப் பாதுகாப்புப் பூங்காவிற்கான அடிக்கல் சிந்து நதிக்கரையில் உள்ள லடாக்கில் நாட்டப்பட்டது, லடாக்கில் இதுபோன்று சுமார் 400 இடங்கள் உள்ளன.
இங்கிலாந்து விலங்கியல் நிபுணரும், எழுத்தாளரும், தொலைக்காட்சித் தொகுப்பாளருமான டெஸ்மண்ட் மோரிஸ் அயர்லாந்தில் தனது 98 வயதில் காலமானார், மனிதர்களை விலங்கு ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக விளக்கும் ‘The Naked Ape’ என்பது இவரது புகழ்பெற்ற புத்தகமாகும்.
உலகளாவிய எல்லை மேலாண்மை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான கடல்சார் பாதுகாப்பு, கடலோரக் கண்காணிப்பு, நாடுகடந்த அச்சுறுத்தல்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்ற ஆஸ்திரியாவின் வியன்னாவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான உலக எல்லைப் பாதுகாப்பு காங்கிரஸில் இந்தியா பங்கேற்றது.
காட்சிக் கலையின் ஒரு வடிவமான சிற்பக்கலை பற்றிய விழிப்புணர்வையும் பாராட்டையும் மேம்படுத்தும் வகையில் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று (ஏப்ரல் மாதத்தின் கடைசி சனிக்கிழமை) சர்வதேச சிற்பக்கலை தினம் அனுசரிக்கப் படுகிறது.