பிலிப்பைன்ஸில் மயோன் எரிமலை வெடித்ததால், ஏறக்குறைய 1,500 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர் மற்றும் மணிலாவுக்கு அருகிலுள்ள வான்வெளிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன.
பிலிப்பைன்ஸ் 'பசிபிக் நெருப்பு வளையத்தில்' அமைந்துள்ளதுடன் அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படும் ஒரு பகுதி ஆகும்.
அமெரிக்காவின் அரிசோனா பாலைவனத்தில், தங்களை விட மிகப் பெரிய அறுவடை எறும்புகளை தாக்காமல் தூய்மைப்படுத்தும் "துப்புரவு எறும்புகளை" அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
டோரிமைர்மெக்ஸ் இனத்தைச் சேர்ந்த சிறிய கூம்பு எறும்புகளானது, அறுவடை எறும்புகளான போகோனோமைர்மெக்ஸ் பார்பாட்டஸ் எறும்புகளின் உடலையும் திறந்த தாடைகளையும் சுத்தம் செய்வதைக் கண்டறிந்தனர்.
பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கும் (US) இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியான பாலிகடன் 2026 ஆனது, 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 முதல் மே 8 ஆம் தேதி வரை பிலிப்பைன்ஸில் நடைபெறுகிறது.
Pixxel மற்றும் Sarvam நிறுவனங்கள் இணைந்து, இந்தியாவின் முதலாவது சுற்றுப்பாதை தரவு மையச் செயற்கைக்கோளான 'Pathfinder'-ஐ உருவாக்கி வருகின்றன; 200 கிலோ எடைப் பிரிவைச் சேர்ந்த இந்தச் செயற்கைக்கோள், 2026-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் கண்காணிப்பு, வள மேலாண்மை மற்றும் உள்கட்டமைப்பு கண்காணிப்பு ஆகியவற்றுக்கான நிகழ்நேர தரவுகள் செயலாக்கத்தை சாத்தியம் ஆக்குவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
புகழ்பெற்ற கேலிச்சித்திர ஓவியரான மரியோ மிராண்டாவின் நூற்றாண்டு பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டு மே 3 அன்று கோவாவின் பனாஜியில் இந்திய அஞ்சல் துறையானது அவருக்கு தபால்தலை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியது.
சிரிப்பின் மூலம் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்காக, 2026 ஆம் ஆண்டிற்கான உலக சிரிப்பு தினம் 2026 ஆம் ஆண்டு மே 3 அன்று (மே மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "World Peace through Laughter" என்பதாகும்.
மனிதாபிமானப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கௌரவிப்பதற்காக, உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 8 அன்று அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Keeping Humanity Alive" என்பதாகும்.