பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (DRDO) உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட வானிலிருந்து தரையிலுள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் 'ருத்ரம்-II' என்ற கதிர்வீச்சு எதிர்ப்பு எறிகணையை (ARM) இந்திய விமானப்படை (IAF) வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
வாட்டிகன் துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் முதல் பொதுநிலைப் பெண்மணியாக மரியா மான்ட்செராட் அல்வராடோ நியமிக்கப்பட்டுள்ளார்; வாட்டிகன் அதிகாரப் பிரிவின் தலைவராகப் பணியாற்றும் முதல் பொதுநிலைப் பெண்மணியாக இவர் 2026 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று அப்பொறுப்பை ஏற்க உள்ளார்.
ஆந்திரப் பிரதேச சமூகம் சார்ந்த இயற்கை வேளாண்மை (APCNF) அமைப்பானது, நிலையான உணவு முறைக்கான உலகளாவிய விருதான 2026 ஆம் ஆண்டிற்கான 'புட் பிளானட்' விருதை வென்றுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான சூரியசக்தி மாத விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தியதற்காக ஒடிசா மாநிலம் 'பிரதான் மந்திரி சூர்யா கர் சிறப்பு விருதுகளுக்கு' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
நடுத்தர நுகர்வோர் மாநிலங்களில் விண்ணப்பங்கள், சூரியசக்தி தகடுகள் நிறுவுதல் மற்றும் விநியோக நிறுவனங்களின் (DISCOM) ஆய்வுகள் ஆகியவற்றில் ஒடிசா முதலிடத்தையும், அதிகபட்ச விற்பனையாளர் பதிவுகள் பிரிவில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான உலக சுற்றுச்சூழல் தினத்தை (ஜூன் 5) முன்னிட்டு, இந்தியாவின் முதல் இயற்கையாகவே மட்கக் கூடிய பால் பொட்டலத்தினை / பாக்கெட்டை 'மதர் டெய்ரி' நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சமூக ஊடகத் தளங்கள் பயனர்களின் வயதைச் சரிபார்க்கவும், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கணக்குகளை உருவாக்குவதைத் தடுக்கவும் கோரும் சட்டத்தை 2026 ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் மலேசியா அமல்படுத்தத் தொடங்கியுள்ளது.
போர்கள் மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூன் 4 ஆம் தேதி 'ஆக்கிரமிப்பால் பலியான அப்பாவி குழந்தைகளுக்கான சர்வதேச தினம்' அனுசரிக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான மேம்பாட்டை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் உலகளவில் அனுசரிக்கப் படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Inspired by Nature. For Climate. For Our Future" என்பதாகும்.