லடாக்கில் உள்ள உரி, ஸ்ரீநகர் மற்றும் லே ஆகியவற்றை இணைக்கும் தேசிய நெடுஞ் சாலை-01ல் (NH-01) சுமார் ₹1,196.22 கோடி மதிப்பிலான ஃபோட்டு லா சுரங்கப்பாதை திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
கலாச்சார ஒத்துழைப்பு, படைப்பாற்றல் பொருளாதாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் (AI) நெறிமுறைப் பயன்பாடு குறித்து விவாதிப்பதற்கான 2ஆவது பிரிக்ஸ் கலாச்சாரப் பணிக் குழு (CWG) கூட்டம் வாரணாசியில் நடைபெற்றது.
இந்தியாவின் பிரிக்ஸ் தலைமையின் கீழ் பிரிக்ஸ் பேரிடர் அபாயக் குறைப்பு (DRR) பணிக்குழுவின் முதல் நேரடியான தொழில்நுட்பக் கூட்டம் ஒடிசாவின் பூரியில் தொடங்கியது.
இந்தக் கூட்டம் உலகளாவிய தெற்கில் பேரிடர் மீள்திறன் மற்றும் நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.
இன்டெல் இந்தியாவுடன் இணைந்து இந்தியா AI தரவு ஆய்வகத்தை நிறுவிய இந்தியாவின் முதல் தனியார் பல்கலைக்கழகமாக சண்டிகர் பல்கலைக்கழகம் உருவெடுத்துள்ளது.
இந்தியா AI தரவு ஆய்வகமானது செயற்கை நுண்ணறிவு (AI), தரவு அறிவியல் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தொழில்துறை சார்ந்த திறன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது முதல் நெகிழ்வு-எரிபொருள் இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்திய அதேவேளையில், மாருதி சுசுகி இந்தியாவின் முதல் நெகிழ்வு-எரிபொருள் பயணிகள் வாகனத்தை அறிமுகப்படுத்தியது.
நெகிழ்வு-எரிபொருள் வாகனங்கள் (FFV) என்பது பெட்ரோல் மற்றும் எத்தனால் கலவைகளில் இயங்கக்கூடியவை; இதில் 85% எத்தனால் (E85) வரை உள்ள எரிபொருட்களும் அடங்கும்.
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு 2026ஆம் ஆண்டிற்கான விளையாட்டுக்கான 'பிரின்சஸ் ஆஃப் அஸ்டூரியாஸ் விருது' வழங்கப்பட்டதுடன் இந்த விருதைப் பெறும் முதல் தனிப்பட்ட கால்பந்து வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
மூளைக்கட்டி, அதனை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சிகிச்சை குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 அன்று உலக மூளைக் கட்டி தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026ஆம் ஆண்டிற்கான இதன் கருத்துரு "A Closer Look" என்பதாகும்.