சின்டிலோமீட்டர் என்பது நிலப் பரப்பிற்கும் காற்றுக்கும் இடையிலான வெப்பம் மற்றும் ஈரப்பத பரிமாற்றத்தை அளவிடும் ஓர் ஒளியியல் கருவியாகும்.
இது ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (TRRI) நிறுவப் பட்டது.
இந்தக் கருவியானது, தேசியப் புவி அறிவியல் ஆய்வு மையத்தின் (NCESS) ஆதரவுடன் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் (TNAU) கீழ் உள்ள முக்கிய மண்டல ஆய்வகத்தின் (CZO) ஒரு பகுதியாகும்.
இந்த ஆய்வகம் ஆனது, 2022 ஆம் ஆண்டு முதல் முழுமையாக செயல்பட்டு வருகிறது என்பதோடு மேலும் இது தமிழ்நாட்டில் உள்ள இத்தகைய ஒரே ஆய்வகமாகும்.
இந்தத் தரவு நீர்ப்பாசனத் திட்டமிடல், பருவநிலை முன்னறிவிப்பு மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் நீர் சுழற்சிகள் மற்றும் பருவநிலைக்கு ஏற்ற வேளாண்மை குறித்த ஆராய்ச்சியை மேம்படுத்த உதவுகிறது.