இந்திய அரசானது அக்டோபர் 21 ஆம் தேதியினை UDAN தினமாக அறிவித்துள்ளது.
இந்தத் தினமானது அத்திட்டத்தின் திட்ட ஆவணம் முதன்முதலில் வெளியிடப்பட்ட நாள் ஆகும்.
இந்தத் திட்டமானது நாட்டின் தொலைதூர மற்றும் பிராந்தியப் பகுதிகளுக்குப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதையும் விமானப் பயணத்தை மலிவானதாக பெறச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டமானது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் தேசிய வான்வழிப் போக்குவரத்துக் கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாகும்.
இந்தத் திட்டம் 2016 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து நிதி வழங்கும்.